உண்மையை அவளிடம் நேரடியாக சொல்ல முடியுமா என்று யோசித்தான்.
"ரேச்சல் டிரை டு அண்ட்ஸ்டன்ட் மீ. நாளைக்கே உனக்கு ஒரு கல்யாணம் ஆகி நீ வேற இடத்துக்குப் போய் விட்டால்… இப்ப இருக்கிற மாதிரி தானே அவங்க இருக்கணும். அந்த சிச்சுவேஷனை அவங்க தாங்கிக்கணும். அதுக்காகதான் நான் இப்போதிருந்து பழக சொல்றேன்."
"நீ ஒன்னும் சொல்ல வேணாம். எங்க அம்மாவை விட்டு நான் எப்பவும் போகமாட்டேன். நல்லா புரிஞ்சிக்கோ"
" அதை எப்படி உன்னால சொல்ல முடியும்?" என்று ஜெமி கேட்க..
" அதற்கு தேவையான விஷயங்களை நான் இப்பவே செஞ்சு வச்சுபேன்.என்னால அவங்க ஹர்ட் ஆகிற அளவுக்கு நான் நடந்துக்க மாட்டேன். இப்போ அவங்க கிட்ட எப்படி பிரியமா இருக்கிறேன். அதேபோல அப்பவும் அவங்களை புரிஞ்சுகிட்டு பிரியமாக இருப்பேன்"
"?"
"ஏன் முறைக்கிறே?. என்ன விஷயத்தை நீ சொல்றேன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சு. எனக்கு நாளைக்கே அம்னீசியா குணம் ஆயிடுச்சின்னா இப்போ அம்மா கிட்ட நான் பழக்குற மாதிரி இருக்க மாட்டேன். இப்போது நடந்தது பற்றி எதுவுமே எனக்கு நினைவில் இருக்காது. அது ஒருவகையான அம்னீசியா. இன்னொரு வகையில கொஞ்சம் கொஞ்சமா இப்ப நடந்ததும் நினைவுக்கு வரும். ஏன்னா… என்னுடைய மூளை எல்லாத்தையும் இப்பவும் பதிவு செய்துட்டுதான் இருக்கு. அம்னீசியா குணமானதும் இப்போ பதிவான விஷயங்களை திரும்ப நினைவிற்கு கொண்டு வர சில குறிப்புகள் இருந்தால் போதும்."
"நீ தப்பா சொல்ற"
"நீதான் நிறைய கதைகளை படிச்சிட்டு தப்பா திங்க் பண்றே"
"ஆனால் அந்த டாக்டர் என்கிட்ட வேற மாதிரி சொன்னாங்க. அவங்க சொன்னது தான் நான் சொல்கிறேன்"
" சரிப்பா நீ சொல்றதை நான் ஒத்துக்குறேன். ரெண்டு விதமான அம்னீசியா இருக்கு. ஒன்னும்ல நடந்த விஷயங்கள் நினைவுக்கு வராது. இன்னொரு டைப்ல அவை ஞாபகத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா வரும். நான் ரெண்டாவது ரகமாக இருக்கணும்னு கடவுளை வேண்டிக்கிறேன்".
மூச்சு வாங்க பேசி முடித்த ரேச்சலை பார்த்து ஷீலா…
"ரேச்சல் அமைதியாக இரு. எதுவானால் என்ன?. நாம் இந்த நிமிடத்தை… இந்த நொடியை