(Reading time: 6 - 12 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

அவருக்கு நன்றி கூறினாள்...

தமிழகமும், மகாராஷ்டிராவும் இறுதிப் போட்டியில் மோதின....  மகாராஷ்டிரா பலம் வாய்ந்த அணி...   திறமை வாய்ந்த பல வீராங்கனைகள் இருந்தனர்.... கடுமையான போட்டியின் பின் தமிழக அணி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது....  இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகியாக துளசி தேர்ந்தெடுக்கப்பட மைத்தி தொடர் நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டாள்...

ரஞ்சி அமர்க்களங்கள் முடிந்து துளசியும் , மைத்தியும் சென்னை திரும்பினர்...  ரஞ்சியின் வெற்றிக்கு பின் மைத்தி, மற்றும் துளசியின் பெயர் வெளியில் தெரிய ஆரம்பித்தது...  ஸ்போர்ட்ஸ் ஸ்டாரில் அவர்கள் பெயரைப் பார்த்து இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி.... 

எத்தனையோ ஜாம்பவான்கள் பெயர் வந்த பத்திரிகையில் அவர்கள் பெயரும் வந்து விட்டதே.... கூடவே தாத்தாவும், பாட்டியும் தன் விளையாட்டை புகழ்ந்தது வேறு மைத்தியை தரையில் கால் படாமல் பறக்க விட்டது...  அவர்களின் மைத்தியின் ஆட்டத்தை பார்த்த பிறகு அவளின் கனவிற்கு துணை நிற்க உறுதி எடுத்தனர்....

அதன் பிறகு பல போட்டிகளிலும் மைத்தியும், துளசியும் விளையாடி வெற்றிகளை குவித்தனர்... 

மைத்தியும், துளசியும் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு முதன் முறையாக இங்கிலாந்துடன் விளையாட  தயாராகினர்... அடுத்த இரண்டு நாளில் டெல்லி சென்று அங்கிருந்து அனைத்து வீராங்கனைகளும் லண்டன் செல்வதாக இருந்தது...   மைத்தியின் முதல் விமானப் பயணம்... ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புகளுடன் மைத்தியும், துளசியும் இருந்தனர்... 

மைத்தி தனக்கு தேவையானவற்றை அடுக்கிக் கொண்டிருக்க அடுத்த வீட்டு மாமா பதறி அடித்து வந்து ஷ்யாமளாவை அழைத்தார்...

தொடரும்

Next episode will be published on 7th Oct. This series is updated weekly on Wednesday mornings.

Go to Kanavu Meippadum story main page

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.