தொடர்கதை - நல்ல முடிவு - 06 - ரவை
நிரஞ்சனும் பிரபாவும் விடியற் காலையிலேயே திருச்சி அடைந்துவிட்டதால், லாட்ஜ் ஒன்றில் ரூம் போட்டு சிறிது இளைப்பாறியபின், காலைக் கடன்களை முடித்துவிட்டு காலை உணவும் உண்டபின், மேனேஜர் சாம்புவுக்கு போன் போட்டு தாங்கள் எப்போது செட்டியாரை சந்திக்கலாம் என கேட்டனர். " எதுக்கு செட்டியாரைப் பார்க்கணும்னு சொன்னால், அவரைக் கேட்டு சொல்றேன்." " என்ன சாம்பு சார்! என்னை சென்னையிலிருந்து வரச் சொல்லிவிட்டு இப்படி ஏதும் தெரியாதமாதிரி கேட்கறீங்க எல்லாம் மனை வாங்கும் விஷயமாகத்தான்........"
" ஓ! மறந்தே போனேன் நீங்க அந்த தி.நகர் உஸ்மான் ரோடு மனைபற்றி பேசினவர் தானே? சரி சரி, இருங்க..."
" சாம்பு சார்! நாங்க மயிலாப்பூர் மனை விற்க வந்திருக்கிறவங்க....போன வாரம் உங்களோட, விலைகூட பேசி முடிச்சேனே அந்த புரோக்கர் பிரபா!"
" அட கடவுளே! ஒரு வாரத்திலே எத்தனையோ மாறுதல்கள்! நிறைய பேர் திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, அடையாறு, தி.நகர், நுங்கம்பாக்கம்னு வெவ்வேற இடங்களிலிருந்து பேசறதால குழப்பமாயிடுது, கொஞ்சம் இருங்க! செட்டியாரை கேட்டுச் சொல்றேன்...."
" என்ன பிரபா! சாம்பு இப்படி குண்டைத் தூக்கிப் போடறாரு......?"
" அதாங்க எனக்கும் புரியலே, இவரை நம்பி இங்கு வந்திருக்கோம்....."
" உன்னை நம்பி நானும் பத்தொன்பது ஓனருக்கு சொல்லிட்டேன், இப்ப என்ன பண்றது?"
" பிரபா! சாம்பு பேசறேன், செட்டியாரிடம் கேட்டேன், அவர் சொல்றாரு மயிலையைவிட, தி.நகர் உஸ்மான் ரோடுதான் நல்ல இடமாம்! விலை அதிகமா இருந்தாலும், அதையே முடிவு பண்ணுவோம், மயிலை மனை வேண்டாங்கறாரு....என்னை என்ன செய்யச் சொல்றீங்க?"
" ஒரே ஒரு உதவி! நாங்க செட்டியாரிடம் ஒரு முறை நேரிலே பேசிப் பார்க்க அனுமதி கேட்டு சொல்றீங்களா?"
" கொஞ்சம் லைன்லே இருங்க!"
நிரஞ்சனும் பிரபாவும் தலையில் கைவைத்தவாறு சிலையாக அமர்ந்திருந்தனர்.
" பிரபா! செட்டியார் உங்களை இப்பவே வரச் சொல்றாரு, விலாசத்தை எழுதிக்குங்க....."
" செட்டியார் வீடு எங்கே இருக்குன்னு எனக்கு தெரியும் உடனே வரோம்...."
இருவரும் ஆட்டோவில் சென்று பத்தாவது நிமிடத்தில் செட்டியாரின் முன் நின்றனர்.
" உங்களை பார்க்க வரச் சொன்ன காரணத்தைச் சொல்லிடறேன்....இந்த சாம்பு செய்த குழப்பத்திலே பாவம்! நீங்க சென்னையிலே இருந்து வந்திருக்கீங்க.... எங்களை மன்னிச்சிடுங்க! நீங்க செலவு செய்த ரயில் டிக்கட் பணத்தை தரேன், உங்களை என் காரிலேயே