சென்னையிலே கொண்டு விடறேன், ஓட்டல் செலவை ஏத்துக்கறேன், ஏற்கெனவே தி.நகர் உஸ்மான் ரோடு மனைதான் எங்க கடைக்கு சென்னையிலேயே சிறந்த இடம்னு முடிவு பண்ணி, இன்னிக்கி நேரிலே பேசி அக்ரிமெண்ட் போட இங்கே வராங்க! சரியா?"
" செட்டியார் எங்கள்மீது கொஞ்சம் கருணை காட்டி, எங்க மனையையே வாங்கிக் கொள்ளணும், ஏன்னா இருபது பேருக்கு வாக்கு கொடுத்துட்டோம்....."
" அப்படியா? என்ன விலை சொல்றீங்க?"
" முப்பது கோடி!"
" தி.நகர் மனை ஓனரும் இதே விலைதான் சொல்றாரு ஆனா மயிலை மனையைவிட பெரிசு! இடமும் வியாபாரம் செய்ய நல்ல இடம்....."
" நாங்க வேணும்னா, விலையை குறைச்சிக்க...."
" அப்படியா? பத்து கோடி குறைக்க முடியுமா?"
" செட்டியார்! அடிமட்ட விலைக்கு கேட்கறீங்களே, கொஞ்சம் பார்த்து சொல்லக் கூடாதா?"
" உங்க பேரு?"
" நிரஞ்சன்!"
" உங்களுக்கு மட்டும் சொந்தமான மனையா?"
" இல்லே, இருபது பேர் ஓனர்கள்! மனையிலே இருபது பிளாட் கட்டி இருபது வருஷமாக குடியிருக்கோம். கடைத்தெரு, கோவில், பீச், அண்ணா சாலை எல்லாம் அருகாமையலே இருக்கு!"
" நல்லவேளை! இருபது பிளாட் இருக்கிறதனாலே, அந்த மனையை இனாமா தந்தால்கூட வேண்டாங்க! ஐயையோ! இந்த இருபது ஓனர்களுடன் பேசி, பத்திரம் சரிபார்த்து, அக்ரிமெண்ட் போடறதெல்லாம் நடக்கிற காரியமா? தவிர, பிளாட்கள் இருபதையும் இடிக்கிற செலவு வேறே! வேண்டவே வேண்டாங்க! தி.நகர் மனை ஓனர் ஒரே ஒருவர்தான். காலி மனை! இழுத்த இழுப்புக்கு வரக்கூடிய நல்ல மனிதர். நாளைக்கே மனையை தர தயாரா இருக்கிறவரு..... நிரஞ்சன்! தப்பா நினைத்துக் கொள்ளாதீங்க! சாம்பு தர பணத்தை வாங்கிண்டு என் காரிலேயே சென்னை திரும்பிப் போயிடுங்க! எனக்கு வேற வேலை நிறைய கிடக்கு! கிளம்பறீங்களா?"
" ஐயா! கொஞ்சம்....." " ஆமாம், உங்க மனைக்கு பட்டா இருக்கா.....?" " அது ஒண்ணும் பெரிய காரியமில்லீங்க.....ஒரே நாளிலே வாங்கித்தரோம்."
" நல்லவேளை! பட்டா இதுவரையிலும் வாங்கலையா? நிச்சயமா உங்க மனை வேண்டாங்க! ஏன்னா, மறுபடியும் சென்னை கார்ப்பொரேஷன் தேர்தல் நடந்து, புது மேயரும் கௌன் சிலர்களும் வந்தபிறகுதான் பட்டா கிடைக்கும். சரி, போய்ட்டு வாங்க!"