சொல்ல,
"கவிதை சொல்றியாக்கும். அவங்க என்ன சொல்றாங்கன்னால் கல்லு கல்லாகவே இருக்கும். அதுக்கு மனசுனு ஒண்ணு கிடையாது. நீயும் அது மாதிரிதான். எனவே இதோட நிறுத்திக்கலாம்னு சொல்றாங்க"
"எனக்கு புரிஞ்சிட்டதுனு சொல்றேன் ரஞ்சன்"
"என்ன புரிஞ்சிட்டது?. இப்ப மன்னிப்பு கேட்பே… திரும்பவும் அப்படித்தான் பேசுவே… ரேச்சலை ஹர்ட் செய்வது புதுசா என்ன?"
ரஞ்சன் சொல்வதை கேட்ட நந்தினி திடுக்கிட்டாள். இது என்ன சத்யன் அண்ணனுக்கு சப்போர்ட் செய்யாமல் தூண்டி விடுவதுபோல பேசுகிறார்… ?
"ரஞ்சன்… அண்ணனை பேச விடுங்க"
"பேச தேவையில்லைனு நான் சொல்லிட்டேன் நந்தினி. " ரேச்சல் சொல்ல,
"சாரி… தப்புனு தெரிஞ்ச பிறகு மன்னிப்பு கேட்கலைனா எனக்கு தூக்கம் வராது" சத்யன் விடாமல் பேச… நடப்பதை ஜெமி புரிந்து கொண்டான்.
இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சினை.. சமாதானம் பேச வந்திருக்கிறான். இதை அனுமதித்தால் ரேச்சல் சத்யனுடன் பழகுவதை தடுக்க முடியாது. சட்டென முடிவெடுத்த ஜெமி,
"ரஞ்சன் ப்ரோ… அவரை கூட்டிட்டு கிளம்புங்க. தேவையில்லாமல் சீன் க்ரியேட் பண்ண வேண்டாம்."
" யார் சீன் க்ரியேட் பண்றது. பாவம் ஒரு பெண்ணை திட்டி நோகடிச்சிட்டோம்னு மனசு நொந்து மன்னிப்பு கேட்க வந்தால்… முகத்துல அடிச்ச மாதிரி பேசறீங்க. வீடு தேடி வந்தால் இதுதான் மரியாதையா?" ரஞ்சன் குரல் உயர்ந்தது.
"மன்னிப்பு கேளுங்கனு நாங்க யாரிடமும் சொல்லவில்லையே… பேசறதையும் பேசிட்டு மன்னிப்பு கேட்பேன்னு சொல்றதும் அதுலயும் மகாராஜா மாதிரி நடந்துக்கறது சகிக்கலை." ரேச்சல் பொங்கினாள்.
"மகாராஜாவா… நாட் லைக் தட்.." சத்யன் குறுக்கிட..
"உங்களோட மன்னிப்பை கேட்டு எதுவும் ஆகப் போறதில்லை"
"உனக்காக நான் சாரி கேட்கணும்னு நினைக்கலை நான் செஞ்ச தப்பை உணர்ந்துட்டேன். உன்னை சரியாக புரிந்து கொண்டேன்… இதையெல்லாம் சொல்லணும் என்று நினைத்தேன். என்னை பார்க்கும்போதெல்லாம் உனக்கு ஹர்ட்டிங்கா இருக்க கூடாது. நீ நல்ல பொண்ணு ரேச்சல்."
"தேங்க்ஸ்… ஆனால் அதனால பெரிய மாற்றம் எதுவும் நடந்துடாது. உங்களை இனிமே பார்க்க