பேரும் சேரனும் என்பது கடவுளுடைய திட்டமாக இருக்கும்" என நினைக்கறேன்."
"வாவ்… இப்ப கடவுளை துணைக்கு சேர்த்துட்டியா. போதும் நந்து… இதோட நிறுத்திக்கோ… ரேச்சலுடைய ஃபேஸ் ட்ரான்ஸ்ப்ளான்டேஷனுக்கான டோனர் மீரா. ஓகே… அதனாலகூட நமக்கு ரேச்சலை பிடித்திருக்கலாம். பட்… " என்று ரஞ்சன் சொல்லும்போது அங்கு வந்த சத்யன்…
"என்ன சொல்ற ரஞ்சன்!. அது ரேச்சல்தானா… ஓ மை காட் அதனாலதான் நான் அவள்ட்ட.." என்று சொல்ல வந்து நிறுத்தினான்.
"அவள்ட்ட… என்னவாம்?" நந்து கேட்டாள்.
"அவளிடம் மீராவின் சாயல் இருப்பதாலேயே கொஞ்சம் உரிமையாக கோபப்பட்டு பழகினேனா..?. அவள் என் மீராவை நினைவூட்டி டிஸ்டர்ப் செய்திருக்கிறாள்…"
"அப்படி. இல்லை அண்ணா. ரேச்சலை எல்லோருக்கும் பிடிக்கும். அவள் நல்ல பெண்"
"அவள் யாராக இருந்தால் எனக்கென்ன… ஆனால் ரஞ்சன் நீ ஏன் இதை என்னிடம் மறைத்தாய்?. நான் வள்ளியூருக்கு செல்ல வேண்டும் என்று வேறு ப்ளான் செய்து இருக்கிறேன்…"
"அது… ரேச்சல்தான் அது என்று தெரிந்தால் நீ என்ன மாதிரி ரியாக்ட் செய்வாய்னு…" தடுமாறினான்.
"இரு… நானே சொல்றேன். சினிமாவில வர்ற மாதிரி மீராவின் முகத்தை ரேச்சலிடம் பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு அவளிடம் ஓடிப் போய் ஒட்டிக் கொள்வேன் என்று நினைத்து விட்டாய்... "
"நாட் லைக் தட்… நந்துதான் ரேச்சல் உனக்கு பொருத்தமாக இருப்பாள்னு"
"டாம் இட்… இது வேற நடக்குதா?. ரஞ்சன் நீ என்னை புரிந்து கொண்டது அவ்வளவுதானா? மீராவுடைய சாயல் மட்டும்தான் அவளிடம் உள்ளது… மற்றபடி குணநலனில் மீராவும் ரேச்சலும் இரு துருவங்கள். ஓகே… ரேச்சலின் கேரக்டர் ரசிக்கும்படி இருக்கலாம்… அவளுக்காக ஒரு வாவ் தரலாம். பட் நான் மீராவின் அமைதிக்கும் அன்பிற்கும் அடிமை ஆனவன். அவளுடனான வாழ்க்கையை நினைத்துக் கொண்டு இருப்பேன். அந்த நினைவிலேயே வாழ்ந்தும் விடுவேன்…"
"அண்ணா…"
"நீ ஒன்றும் பேசக் கூடாது நந்து. நீங்கள் யாருமே என்னுடைய வலியை புரிந்து கொள்ளவில்லை. மீராவின் உருவத்தில் ஒரு பகுதி ரேச்சலிடம் இருக்கிறது. அந்த சாயல்தான் என்னையும் மனுகுட்டியையும் அவளிடம் ஈர்த்திருக்கிறது. ஆனால்… ஒரு விஷயம்