மைத்தியின் குடும்பமும் அப்படியே... சியாமளா வேலை செய்வது தனியார் பள்ளி... எனவே மிகக்குறைந்த சம்பளமே அவருக்கு... அனந்து LIC-யில் இருந்தாலும் அவருக்கும் சம்பளம் குறைவே... இதில் இரண்டு குழந்தைகளும் படிப்பது தனியார் பள்ளியில் போதாக்குறைக்கு மைத்தியின் பயிற்சிக்கு வேறு அவர்கள் மாதாமாதம் கணிசமான தொகை எடுத்து வைக்க வேண்டும்...
ரஞ்சி போட்டியிலிருந்துதான் அவளுக்கு பணம் என்ற ஒன்று வந்தது..... அதுவரை விளையாடிய விளையாட்டுக்கள், போக்குவரத்து செலவு, தங்கும் செலவு.... என்று அதற்கு வேறு தனியாக செலவாகும்... இவர்கள் குடியிருப்பது ஷியாமளாவின் தந்தையின் வீடுதானென்றாலும் அதற்கும் இவர்கள் வாடகை கொடுத்தே இருந்தனர்.... எனவே இத்தனை பெரிய செலவை எப்படி சமாளிப்பதென்று ஷியாமளா மிகுந்த யோசனையுடனே வந்தார்....
“என்ன ஷியாமளா யோசிச்சுண்டு இருக்க...”
“பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிக்கறேன் அண்ணா... பேங்க்ல ஏழாயிரம் இருக்கு.... கைல ஒரு ரெண்டாயிரம்... பத்தாயிரம் வரை சமாளிக்கலாம்... மிச்ச பணத்துக்கு என்ன பண்றதுன்னு தெரியலை...”
“நாங்க மூணு பேர் உனக்கு இருக்கோம்... கவலைப்படாம இரு... ஏதானும் பார்க்கலாம்....”
இருவரும் பேசியபடியே வீடு வந்து சேர்ந்தனர்... அனைவருமே வீட்டு முற்றத்தில் அமர்ந்திருக்க ஷியாமளாவும், கிருஷ்ணனும் அவர்களுடன் சென்று அமர்ந்தனர்... இருவருக்கும் கற்பகம் பாட்டி காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தார்....
“டாக்டர் என்ன சொன்னார் கிருஷ்ணா.... சீக்கிரம் சரியாய்டுமோன்னோ....”, கற்பகம் கவலையுடன் கிருஷ்ணனை கேட்க, அனைவரும் அதே கேள்வியை முகத்தில் தாங்கி அவர்களை பார்த்தனர்....
“நிலைமை கொஞ்சம் சீரியஸ்தான்ம்மா.... நம்ம குரு டாக்டரும் பார்த்துட்டு உடனே ஆபரேஷன் பண்றதுதான் நல்லதுன்னு சொல்லிட்டார்.... முதுகுலையும், தலைலையும் பட்டிருக்க அடி கொஞ்சம் அபாயமாத்தான் இருக்குன்னு சொன்னார்... எத்தனை சீக்கிரம் பன்றோமோ அத்தனை நல்லது... அதுவும் GH-ல சொன்ன டாக்டர் ஸ் ரெண்டு பேருமே ரொம்ப பேர் வாங்கினவாளாம்.... அவா நேரம் கிடைக்கறதே பெருசுன்னு சொன்னார்.... அதனால நம்ம பக்கத்துல இருந்து தாமதம் பண்ணாம இருக்க சொன்னார்... நாங்களும் நேரா GH போய் டாக்டர் கிட்ட ஆபரேஷனுக்கு சரி சொல்லிட்டு வந்துட்டோம்....”
“பகவானே... என்னடா கிருஷ்ணா சோதனை ..... தேமேன்னு அவர் பாட்டுக்கு வேலையை பார்த்துண்டு இருந்தார்... இப்படி போய் விழுந்து வைப்பாரோ....”