தொடர்கதை - நல்ல முடிவு - 09 - ரவை
நிரஞ்சனை தூங்கச்சொல்லி கலா அனுப்பினாலும், மற்ற ஓனர்கள் நேரங்காலம் இன்றி போன் செய்தார்கள்.
" நிரஞ்சன்! கங்கிராட்ஸ்! இது எங்களுக்கு கனகதாரை! கடவுளே உங்கமூலமா பணம் தராரு! உங்களை மறக்கவே மாட்டோம்!"
" நிரஞ்சன்! உங்களை நேரில் பார்த்து கட்டியணைக்கணும் போலிருக்கு! நாளை காலை வரேன்!"
"உங்களைத் தவிர, இந்த சாதனையை வேற யாராலும் சாதித்திருக்க முடியாது..."
"உடனடியா பிளாட்டை காலி பண்ணச்சொல்லி வாடகை தரும் குடியிருப்பவனுக்கு நோட்டீஸ் சொல்லிட்டேன்."
" ஒரு மாசத்திலே காலி செய்தால், ஐம்பது லட்சமா? நம்பவே முடியலே!"
" ஊக்கத்தொகைபற்றி இப்பத்தான் முதன்முறையா கேள்விப்படறேன். சூபர்!"
" அதெப்படி நீங்க சொல்றபடி ஆடறாரு, செட்டியார்! நீங்க சொக்குப் பொடி வச்சு இருக்கீங்களா?"
இப்படி ஒவ்வொருவரும் தன்னைப் புகழ்ந்து துதி செய்தபோது, நிரஞ்சன் தன் மனைவிக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தான். அவள்தானே சூதுவாது இன்றி நேர்மையா நடக்க அறிவுரை தந்தவள்!
மறுநாள் காலை, ஓனர் பத்தொன்பது பேரும் கூடி நிரஞ்சனுக்கு மாலை போட்டு நன்றி கூறினர்.
கூடவே, வேண்டுகோள் வைத்தனர்.
"முதல்லே பிளாட்டை காலி பண்ணிடறோம். வேற எதுக்கும் சம்பந்தப்படுத்தாம ஊக்கத்தொகையை தரச் சொல்லுங்க! ஏன்னா, இந்த வில்லங்க சர்டிபிகேட் வாங்க முன்னேபின்னே ஆகலாம்..."
" பேசிப் பார்க்கிறேன். ஊக்கத்தொகை பல லட்சம் தந்தபிறகு பத்திரங்களில் ஏதாவது தவறு இருந்தால் என்ன செய்வதுன்னு ......"
" அப்படியெல்லாம் தவறு வராது. இருபது வருஷம் சொத்துவரி கட்டிக் கொண்டிருக்கிறோம். அந்த ரசீது ஒண்ணு போதும், பிளாட் நமக்குத்தான் சொந்தம்னு சொல்ல!"
" அது சரி, நம் பிள்ளைகளே எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டால், கொடுத்த பணம் திரும்பி வராதே!"
" பிளாட்டையே அவரிடம் ஒப்படைக்கிறோமே, அது போதாதா?"
" இது லீகல் மேட்டர்! அவர் வக்கீலை கேட்காமல் ஏதும் சொல்லமாட்டார். இன்று வக்கீலின்