தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 03 - பூர்ணிமா செண்பகமூர்த்தி
பேருந்தில் இருந்தவர்கள் நெருங்கி வருவதற்குள், ஒரு கை அவளின் தோளைத் தொடவும். மதி தான், புன்னகையுடன் , “குட் மார்னிங் ரம்மி! கண்டிப்பா சென்ட் பெர்சென்ட் வாங்கிடுவ தானே!” என்றாள்.
“குட் மார்னிங் மதி, எதோ படிச்சிருக்கேன். சென்ட் பெர்சென்ட்லாம் சான்ஸ் இல்ல.!”
ஹே ஏண்டி கதை விடுற, கொஸ்டின் பேப்பர் தான் நேத்து மார்னிங்கே அவுட் ஆகிடுச்சே. போன்லையே காலேஜ் காலேஜா ஸ்ப்ரெட் ஆகிடுச்சு. உனக்குத் தெரியாதாடா?
டேய் மதி, எனக்கு நிஜமாவே கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆனது தெரியாது. எல்லாத்தையும் தான் படிச்சிட்டு வந்தேன். நீயாவது எனக்கு சொல்லி இருக்கலாம்ல?
உனக்கு டே ஸ்காலர்ஸ் சொல்லிஇருப்பாங்கன்னு நினைச்சேன்.
கண்மணி அங்கே வர, மதி எழுந்து சென்றாள்.
என்ன கண்மணி கொஸ்டீன் பேப்பர் அவுட்டுன்னு சொல்றாங்க. எல்லாரும் புல் மார்க்ஸ் வாங்குவாங்க. நான் தான் கம்மியா வாங்கப் போறேன். நீ கூட சொல்லல பார்த்தியா?
எனக்குத் தெரிஞ்சா உனக்கேன்டி சொல்லாமல் இருக்கேன். எங்க வீட்ல எப்பவும் என்னை போன்கிட்ட விடுறதே இல்ல. கார்த்திக்குக்குத் தெரிஞ்சிருந்தால் கூட அவனாலும் என்கிட்டே கால் பண்ணி சொல்லமுடியாது. கொஸ்டின் பேப்பர் விஷயம் எனக்கே இன்னிக்கு காலைல பஸ்ல வந்து தான் தெரியும். மார்க் பண்ணிட்டு வந்திருக்கேன். கொஞ்சம் வேகமா அதை மட்டும் ரிவைஸ் பண்ணலாம் வா! ரெண்டு பேரும் படித்துக் கொண்டு இருந்தாலும், ரம்யா நிமிர்த்து ஒரு முறை தினேஷைப் பார்த்தாள். அவனும் இவளைப் பார்க்கவும் சட்டென்று தலையைக் குனிந்து கொண்டாள். ஒருவேளை கொஸ்டீன் பேப்பர் பத்தி எனக்குச் சொல்றதுக்கு நேத்து மதியம் இவன் தான் போன் பண்ணானோ? ச்சே மிஸ் பண்ணிட்டேனே என்று ஒரு நொடியும், அப்படி ஒன்னும் அவன் கிட்ட கேட்டு படிச்சுப் பாஸ் வேண்டாம் என்று மறுநொடியும் நினைத்தாள். எக்ஸாம் ஹாலுக்குள் நுழைய மணி அடித்தது. கேள்வித்தாள் எளிதாகவே இருந்தது. எதோ அரியர் வைக்காமல் எல்லாவற்றிலும் பாஸ் பண்ணிவிட்டால் போதும் என்று எண்ணிக் கொண்டே வந்தாள்.
என்ன மதி, நீ சென்ட் பெர்சென்ட் வாங்கிருவியா? என்று ரம்யா கேட்க, என்ன தான் கொஸ்டின் பேப்பரை அவுட் பண்ணிடாலும், எல்லாத்தையும் மண்டைல ஏத்திட்டு ஆன்சர் பேப்பர்ல கொட்டுற அளவு எனக்குத் திறமையில்ல ரம்மி. அப்பா கார் அனுப்பிட்டாங்க, இப்பவே கிளம்பறேன். ஹேப்பி நியூ இயர் டி. அட்வான்ஸ் விஷஸ்! அடுத்த வருடம் பார்ப்போம். ! என்று கையாட்டி விட்டு விரைந்தாள் மதி.
என்ன பிளான் லீவுக்கு என்றாள் கண்மணி. ஒண்ணுமில்ல, அடுத்த செமெஸ்டர் புக்ஸ்