"வாட்…?"
"ரேச்சலை காதலிச்சு மீண்டும் கல்யாணம் செய்துக்கலாம்."
"ஆஹா… அது இன்னும் கடினமான விஷயம் ஆச்சே. ரேச்சலுக்கும் சத்யனுக்கும் ஆகவே ஆகாது.."
"நோ… நோ… நான் நம்ப மாட்டேன். அன்னிக்கு நானும்தான் ஹாஸ்பிட்டல்ல இருந்தேன். என்னவொரு ரொமான்டிக் சீன்…" ஜெமி சொல்ல… சத்யன் கடுப்பானான்.
"கொஞ்சம் வாய மூடிட்டு வர்றீங்களா…" கடுகடுத்தான்.
ஹும்… அங்கே ஆரம்பித்த கோணல் இன்றுவரை கோணிகிட்டே போகுது… ரேச்சலா மீராவான்னு குழம்பி அவன் பட்ட பாடு கடவுளுக்குதான் தெரியும்!.
"கோவிச்சுக்காதீங்க… நான் என்ன சொல்றேன்னா… இது மாதிரி பழைய கதையை கரெக்ஷன் பண்ணாமல் புதுசா கதையை எழுதறது ரொம்ப ஈஸி. நேரமும் மிச்சமாகும்…" ஜெமி சமாதானமாக சொன்னான்.
"வாவ்… நினைச்சு பார்க்கவே நல்லா இருக்கு. சத்யன், உருப்படியான ஐடியாவா இதை ட்ரை பண்ணு. ஆனால் ரேச்சல் கொஞ்சம் புரட்சி ரகம். பூவை கைல வச்சிகிட்டு சுத்தற ஹீரோவை பிடிக்காதுனு நினைக்கறேன்." ரஞ்சன் உற்சாகமாக தலையாட்டினான்.
"சினிமால வர்ற மாதிரி நாலஞ்சு ரௌடிகளை அனுப்பி ரேச்சலை டீஸ் பண்ண வைக்கலாமா… அப்போ சத்யன் சார் வந்து காப்பாத்துற மாதிரி செஞ்சால்…"
ஜெமி உண்மையாகத்தான் சொல்றானா… இல்லை கலாய்க்கிறானா?
"ஹாஹ்ஹா.. ரேச்சலே பெரிய ரௌடி… நாலஞ்சு பேரை மட்டுமல்ல சத்யனையே பந்தாடி விடுவாள்"
"ஷட் அப். நீயெல்லாம் ஒரு மச்சான்… இன்னும் ட்ரிகர் பண்ணிகிட்டு… என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கப்பா. ஏதோ ஒரு க்ளூவை நான் மிஸ் பண்றேன். அது என்னனு புரியலை" நெற்றியை சுருக்கி யோசித்தான்.
"க்ளூவா… அப்படினா…" ரஞ்சன் கேட்டான்.
"இந்த பிரச்சினையோட ரியல் ப்ராப்ளம் மீராவின் அம்னீசியா இல்லை… வேற எதுவோனு தோணுது… ஐ ஹாவ் டு திங்க்"
"நிஜமாவா…"
"அவளுக்கு அம்னீசியாகிட்ட பிரச்சினை இல்லை. என்னிடம்தான் பிரச்சினை… அவ்வளவு டயர்டா இருந்த போதும் ஃபுல் எஃபெக்ட் தந்து முறைச்சிட்டு போனாள்."
"எப்ப சத்தி? நான் பார்க்கலையே… வேற பக்கம் தலையை திரும்பிகிட்டு போனதை