" பிளாட்டை ஒரு மாசத்திலே காலி பண்ணி, அதிக ஊக்கத் தொகை வாங்கணுமே, என்ன செய்யலாம்?" " காலி பண்ணிடலாம்..." " அது சரி, காலி பண்ணிய பிறகு எங்கே வசிப்பது?" " நம் கையில் உள்ள பணம், வாடகைக்குத்தான் போதும். அதுக்குமே, ஆறுமாத முன் பணம் கொடுக்க பணம் தேடியாகணும். மறந்துட்டேனே, நம்ம வீட்டு மேலே வாங்கியிருக்கிற பேங்க் கடனை தீர்த்தாகணும் ஒரு மாசத்திலே முடியவே முடியாது......"
" அம்மா! ஒவ்வொரு மாத டிலேயின் விலை பத்து லட்ச ரூபாய்! புரியுதா?"
" என்ன சொல்றீங்க, சேகர் கேட்கறானே?"
"கலா! நீ வேலை செய்ற பேங்க்ல பர்சனல் லோன் எவ்வளவு கிடைக்கும்?"
" ஐம்பதாயிரம் தான், அதிக பட்சமா தருவாங்க!"
" எங்க ஆபீஸிலே அது கூடத் தரமாட்டாங்க, அதிக பட்சமா முப்பதாயிரம்தான் கிடைக்கும்......"
" போதுமே! மொத்தம் எண்பது ஆயிரம் கடன்வாங்கி அதிலே ஆறுமாத முன்பணம் தந்து வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு உடனடியா போய்ட்டு, ஊக்கத்தொகை கிடைத்ததும், கடனை அடைத்துவிடுவோம். ஆறு மாதங்களிலே ஒரு கோடி கிடைச்சதும், பிளாட்டோ, வீடோ வாங்கிடுவோம்....."
" அப்பா! அம்மா சொல்ற படி செய்யுங்க! அதிகபட்ச ஊக்கத்தொகை கைக்கு வந்துடும்....."
" ஓ.கே. கூடவே, வில்லங்க பத்திரம் வாங்க உடனடியா ஆளை பிடிக்க யோசனை பண்றேன்...."
" எப்படி வாங்குவீங்க? பேங்க் லோன் ஒரு லட்சம் அடைத்தபிறகுதானே, பிளாட் மீது கடன் ஒண்ணுமில்லேனு சர்டிபிகேட் தருவாங்க! அந்த பணத்தை எப்படி புரட்டறது?"
" மறந்தே போச்சே! ஒரு லட்ச ரூபாய் கடன் எதுக்கு எப்போ வாங்கினோம்?"
" ஊரிலே இருக்கிற உங்க பெரிய வீட்டை ரிபேர், பெயிண்ட், வேலைக்காக பத்து வருஷம் முன்பு லோன் வாங்கினோம். மாதம் அதுக்கு வட்டி வேறே கட்டறோம்..."
" இரு, இரு! ஒரு திடீர் யோசனை! அந்த பெரிய வீட்டுமேலே கடன் வாங்கினா சுலபமா ரெண்டு லட்சரூபாய் கிடைக்குமே, யாரிடமும் நாம் கடனுக்கு கைநீட்ட வேண்டாமே!"
" நல்ல யோசனை! அந்த வீட்டு பத்திரத்தை தேடி எடுத்து, ஊருக்குப் போய் பணம் புரட்டிண்டு வாங்க!"
பிரச்னை தீர்ந்த திருப்தி மூவர் முகத்திலும் தெறித்தது.
நடுத்தர வர்க்க குடும்ப பிரச்னைகளில், இந்தமாதிரி நெருக்கடி நேரத்திலே கடன் புரட்டுவது முக்கியமான ஒன்று