பேங்க் மாப்பிள்ளையைக் கட்டிக்கறதுதான் நல்லது!ன்னு தோணுது!...ஏன்னா பேங்க மாப்பிள்ளை நல்ல சாய்ஸ்!...போனா வராது பொழுது சாய்ஞ்சா கிடைக்காது!” சோகத்திலும் நகைச்சுவையோடு பேசும் சகோதரியை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் அர்ச்சனா.
“என்னக்கா நீ பேசறே?...இவ்வளவுதானா நீ என்னை புரிஞ்சு வெச்சிருக்கறது?....மூத்தவ நீ கல்யாணம் ஆகாம இருக்கும் போது நான் என் கழுத்துக்கு தாலி வாங்கிக்குவேனா?...சொல்லுக்கா...அந்த அளவுக்கு போக்கத்தவளா நான்?”
“கொக்கைப் பார்த்துக் கற்றுக் கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை!...கொத்தும் போது கொத்திக் கொண்டு போக வேண்டும் நல்லதை!”ன்னு பாலசந்தர் படத்துல ஒரு சினிமா பாட்டுல கூட வருமே...அதுதாண்டி யதார்த்தம்!” என்று சுலோச்சனா சொல்ல,
“அடி படுவே நீ?” என்று அவளை விரலைக் காட்டி எச்சரித்தாள் அர்ச்சனா.
“அப்படியில்லை அர்ச்சனா!...நாம நம்ம அப்பாவையும் அம்மாவையும் கொஞ்சம் நெனச்சுப் பார்க்கணும்!...அவங்க...எதுக்காக தவிக்கறாங்க?...யாருக்காகத் துடிக்கறாங்க?...நம்ம பொண்ணு...அது சுலோச்சனாவா இருந்தாலும் சரி...அர்ச்சனாவா இருந்தாலும் சரி!...நல்லா இருக்கணும்!...அப்படித்தானே நெனச்சு எல்லாம் செய்யறாங்க?...அவங்களை நாமே எதிர்க்கலாமா?..” என்றபடி தொடர்ந்து எதையெதையோ பேசி அவள் மனதைக் கலைக்க முயன்ற சுலோச்சனாவின் வாயைச் சட்டெனப் பொத்திய அர்ச்சனா,
”போதும்க்கா...இதுக்கு மேலே இதைப் பத்திப் பேச வேண்டாம்!...அந்த நாய்க்கு உன்னைக் கட்டிக்க குடுப்பினை இல்லை...விடு!”
“அப்ப...உன்னைக் கட்டிக்க குடுப்பினை இருக்கா?” பட்டென்று கேட்டாள் சுலோச்சனா.
“அதுவும் இல்லை!...ஏன்னா...நான் அவனைப் போல் நாய் இல்லை!” “பளிச்”சென்று சொல்லி விட்டு நகர்ந்தாள் அர்ச்சனா.
தொடரும்...
Next episode will be published on 5th Dec. This series is updated weekly on Saturdays.