சந்தியாவை திரும்பிப்பார்த்த ஜனனி கண்களை சுருக்கி உதடுகளை வளைத்து நெற்றியை சுருக்கி வித்தியாசமா?... என்றாள்.
அவளின் நெற்றியில் தோன்றிய வரிகளை தன் கைகளால் வருடினாள் சந்தியா.
இது என்னடி புது பழக்கம் ...என்று சந்தியாவின் கைகளை ஜனனி வேகமாகத் தட்டி விட்டாள். அந்த நொடிப் பொழுதில் ஜனனியின் மனதிற்குள் அந்த பிகே²ஐ ஏற்கனவே பார்த்தது நினைவுக்கு வர சிறு சிரிப்பும் கவலையும் ஏமாற்றமும் நொடிப்பொழுதில் மாறி மாறி வந்து போய் இயல்பாகவும் மாறினாள்.
நொடிப்பொழுது மாற்றம் என்றாலும் சந்தியாவின் கண்களுக்கு எதுவும் தப்பில்லை. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வித்தியாசம்தான் ஜனனி. ஊரிலிருந்து சென்னைக்கு வரும்போது எப்படி இருந்தியோ அப்படியே தான் இருக்கிறாய் என்றாள் சந்தியா.
ஒரு நிமிடம் கூர்ந்து தோழியை பார்த்தாள் ஜனனி. இல்லை சந்தி... அப்போ இருந்த கவலை கோபம் எதுவும் இப்போது இல்லை. வருத்தம் மட்டும் தான் இருக்கிறது என்று அவளுக்கு காபி போடுவதற்காக கிச்சனுக்குள் சென்றாள்.
கிச்சன் வாசலில் சாய்ந்து நின்று கொண்டு கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு தலையை சாய்த்துக்கொண்டு ஜனனியை பார்த்து கொண்டிருந்தாள் சந்தியா.
ஜனனி சந்தியாவின் செயல்களை கவனித்துக் கொண்டுதானிருந்தாள். அவளின் செய்கைகள் அவளுக்குள் இருக்கும் கோபத்தை உணர்த்தினாலும் எதையும் கவனிக்காதது போல நீ ஒரு பொண்ணு என்று அடிக்கடி உனக்கு நினைவு படுத்த வேண்டியது இருக்கிறது. நீ ஒன்றும் பையனில்லை என்று சொல்ல பையன் மட்டும் தான் சைட் அடிக்கணும் என்று ரூல்ஸ் இருக்கா... நானும் சைட் அடிப்பேன், இந்த புது பொண்ணை என்றவள் ஆனால் இந்த புதுபொண்ணு முகத்தில் கல்யாண களை காணுமே.... அது எங்கே போனது என்றே தெரியவில்லை என்று தேடுவது போல பாவனை செய்ய ஜனனி கையில் இருந்த டிரேயை கொண்டு சந்தியாவின் முதுகில் அடிக்க அவளின் அடிக்கு தப்புவது போல ஓடி சென்று சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்த சந்தியா, ஜனனி இப்போது சொல்... என்ன பிரச்சனை? எதற்காக இந்த அவசர கல்யாணம்? மாப்பிள்ளை ஃபோட்டோ எடு... அவன் பெயர் என்ன? அவன் என்ன செய்கிறான்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் சந்தியா.
ஜனனியின் முகத்தில் தோன்றிய புன்முறுவலைக் கண்டவள் சரி சரி ஒவ்வொரு கேள்வியாக கேட்கிறேன் என்று எதையோ கேட்க வாய் திறக்க போக அதற்குள் ஜனனி குறுக்கிட்டு சந்தியா நீ எத்தனை கேள்வி கேட்டாலும் என்னிடம் ஒரே பதில் தான் இருக்கிறது என்றாள்.