கொண்ட அர்ச்சனா, “ஓ...அப்படியா?” என்று சுவாரஸியமே இல்லாமல் சொல்லி வைத்தாள்.
“நான் இப்ப எதுக்காக உங்ககிட்ட வலிய பேச வந்திருக்கேன்னா...திசை மாறி...தறி கெட்டுப் போக இருந்த என்னோட வாழ்க்கையைக் காப்பாத்தினதுக்கு உங்களுக்கு நன்றி சொல்லிட்டுப் போகத்தான் வந்திருக்கேன்!”
அர்ச்சனா எதுவும் புரியாமல் அந்த மைதிலியை நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்க்க, “இதென்னடா புதுக் கதையாயிருக்கு!”
சவிதா சுவாரஸ்யமானாள், “என்னம்மா சொல்றே?...நன்றியா?...யாரு...யாருக்கு?..எதுக்கு நன்றி?...ஒண்ணும் புரியலையேம்மா..”
சட்டென்று அப்பெண் கண் கலங்க, அர்ச்சனாவும், சவிதாவும் திடுக்கிட்டுப் போயினர்.
“ஹலோ...ஹலோ...இப்ப எதுக்கு திடீர்னு அழுவறீங்க?...விஷயத்தைச் சொல்லிட்டு அழுங்க!...பார்க்கறவங்க எங்களைத் தப்பா நினைப்பாங்க!” என்றாள் சவிதா.
“வந்து...நானும் அந்தப் பிரபாகரும் ஒரு வருஷம்...ரெண்டு வருஷமல்ல...கிட்டத்தட்ட நாலு வருஷமா ஒருத்தரையொருத்தர் சீரியஸாய்க் காதலிச்சிட்டு வர்றோம்!...எங்க காதல் விஷயம் எங்க கூட வேலை பார்க்கற எல்லோருக்குமே தெரியும்!...உண்மையைச் சொல்லப் போனா...எங்க வீட்டுக்குக் கூடத் தெரியும்!”
“அப்படியா?...அப்படின்னா எதுக்கு அந்த ஆள் எங்க அக்காவைப் பெண் பார்க்க வரணும்?” அர்ச்சனா இடையில் புகுந்து கேட்க,
“அவன் எனக்குத் தெரியாம...ரகசியமா...அந்த வேலையைச் செய்திருக்கான்!...ஆக்சுவலா நீங்க எங்க பேங்கிற்கு வந்து சண்டை போட்டப்பத்தான் எனக்கு அந்த விஷயமே தெரிய வந்தது!..அது தெரிஞ்சதுமே நான் நொறுங்கிப் போயிட்டேன்!...”
“அட..என்னங்க?...“நாலு வருஷமா சீரியஸா காதலிச்சிட்டு இருக்கேன்”னு சொல்லுறீங்க!...அப்புறமெப்படி அந்த ஆள்...?” அர்ச்சனா யோசித்தாள்.
ஆனால், சவிதா “கப்”பென்று விஷயத்தைப் பிடித்து விட்டாள்.
“த பாரு அர்ச்சனா!...முதல்ல இந்தப் பொண்ணோட அழகுல மயங்கி இவளைக் காதலிச்சிருக்கான்!...தரகர் மூலமா உங்கக்கா வரன் கைக்கு வர...அதிலிருந்த உங்க அக்கா போட்டோவைப் பார்த்து...அவளோட அழகுல மயங்கி...அவளைப் பெண் பார்க்க வந்திருக்கான்!”
அவளைத் தொடர விடாமல் நிறுத்திய அர்ச்சனா, மீதியைத் தான் தொடர்ந்தாள், “பொண்ணு பார்க்க வந்த இடத்துல பொண்ணு கூட இருந்த என்னைப் பார்த்து என்னோட அழகுல மயங்கி என்னைக் கட்டிக்கறதுல குறியாயிட்டான்!”
“கரெக்ட்!...கரெக்ட்!...அதேதான்...அதேதான்!...ஒரு வேளை நீ அவனைக்