(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 03 - தனுசஜ்ஜீ

காலங்கள் ஓடும்

இது கதையாகி போகும்

என் கண்ணீர் துளியின்

ஈரம் வாழும்....

தாயாக நீதான் தலைகோத வந்தாலும்,

உன் மடிமீதும் மீண்டும் ஜனனம் வேண்டும்.

என் வாழ்க்கை நீ இங்கு தந்தது.

அடி உன் நாட்கள் நான் எங்கு வாழ்வது.

காதல் இல்லை...... இது காமம் இல்லை....... இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை.

காதல் கொண்டேன் திரைப்படத்தின் அருமையான பாடல் எஃப் எம்-ல் ஒலித்துக்கொண்டிருக்க அந்த பாடலுக்கு ஏற்றவாறு வாயசைத்து அவனும் உற்சாகமாக பாடிக்கொண்டிருந்தான். அப்பொழுதுதான் அவன் கவனித்தான். இந்த பாடலின் கடைசி வரியை தன் வாழ்க்கை எதை நோக்கி  பயணிக்கிறது. இன்னொருத்தவரின் மனைவி என்று தெரிந்தும் நான் ஏன் அவளை பற்றிய சிந்தனையில் உள்ளேன். காரை ஒரு ஓரமாக நிறுத்தினான். இரண்டு கையையும் தலையில் வைத்து ஸ்டியரிங்கில் தலைகவிழ்த்துவிட்டான். அவனுக்கு தலைவலி உயிர்போனது. காலையில் நான் இருந்த மனநிலை என்ன??? இப்பொழுது நான் இருக்கும் மனநிலை என்ன??? நான் என்ன நினைப்பில் இப்புடி டீன் ஏஜ் பாய் மாறி குதிச்சிட்டு இருக்கேன். அந்த அளவா என் மனம் தறிக்கெட்டு திரிகிறது. நோ... நா இப்புடி இருக்குறது சரி கிடையாது. தப்பு நா செய்றது தப்பு...... அவளை நான் சாதாரணமா பார்க்க முயற்சி பண்ணனும். அது என்னால முடியுமா???? இந்த அளவா நான் தேன்மொழி-ய லவ் பண்ணிருக்கேன் ஓ மை காட் எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. இந்த பாழாய் போன காதல் எனக்கு எதுக்கு குடுத்த..... என்னால இதுல இருந்து வெளிய வரவும் முடியல..... உள்ள போகவும் முடியாம கொடுமையா இருக்கு......என்று அவன் மனதளவில் கதறிக் கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் அவன் அலைபேசி அலறியது.

யாரென்று பார்த்தவன் உடனே தன்னை சமநிலை படுத்தி  நீண்ட பெரு மூச்சை வெளியேற்றி விட்டு, செல்பேசியை அட்டன் செய்து காதில் வைத்தான்.

      எதிர்புறம் என்ன கூறப்பட்டதோ. ஐல் பி தேர் இன் ஃபைவ் மினிட்ஸ் என்று கூறி விட்டு, மின்னல் வேகத்தில் காரை இயக்கி அந்த பள்ளி வளாகத்தின் முன் வண்டியை நிறுத்தினான்.

           அங்கு அவனுக்காக காத்திருந்த ஐம்பது வயது பெண்மணியை நோக்கி முகம் மலர வேக எட்டுக்கள் போட்டு அவரை அடைந்தான்.

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.