வக்கீலின் பின்னே, மற்ற குடியிருப்போர்.
நிரஞ்சன் முதலில் குடியிருப்போரிடம் " நீங்க எல்லாரும் தொடர்ந்து பல வருஷங்கள் இங்கே இருக்கப் போறீங்க, மனையை விற்கப் போவதில்லை. நிம்மதியா வழக்கம்போல இருங்க!"
பிறகு, ஓனர்களிடம், " செட்டியார் சென்னையிலே கடை துவக்கப்போறதில்லை யாம், அதனாலே நம்ம மனை வேண்டாமாம். அதனாலே நாம் வழக்கம்போல இங்கே வாழலாம்." என்றார்.
எல்லோருக்கும் கடும் அதிர்ச்சி! பத்து லட்சங்களை இழந்துவிட்டோமே என ஒரு சாராரும் ஒண்ணரை கோடி போச்சே என ஓனர்களும் வருந்தினர்.
" பல வருஷங்களா சந்தோஷமா வாழ்ந்துவந்த நம்மை, இந்த மனை விற்கிற பிரச்னை திடீர்னு எழுந்து நம்ம பேராசையை கிளறி விட்டு, இப்போது ஏமாற்றியும் விட்டது! இனி, நாம் நாமாக தொடர்ந்து இருப்போம். எல்லாம் நன்மைக்கே! நல்ல முடிவாகவே இதை ஏற்போம்" என்றார்!
மு ற் று ம்!