தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 20 - ஜெபமலர்
குயிலி... நாம் இங்கிருந்து தப்பிக்க முடியும் என்று நினைக்கிறியா.
ஆமா தாத்தா... ஏன் அப்படி கேட்கிறிங்க
அம்மாடி இந்த ஒரு அறை மட்டும் இல்லை.. இதே போல மூன்று அறை இருக்கு. அதை கடந்து வெளியே சென்றால் தான் மேல ஏற படிக்கட்டுகள் வரும். அதற்கு பிறகு தான் வீடு இருக்கு. அந்த வீட்டில் இருந்து வெளியே சென்றால் தான் தப்பிக்க முடியும். இத்தனை தாண்டி வெளியே போக முடியாது என்று எனக்கு தோணுது.
தாத்தா... நீங்க என்ன சொல்றீங்க... படி ஏறி நாம மேல போகனுமா
ஆமாமா.. என்னை இங்கு கூட்டிட்டு வரும் போது ஒரு வீட்டுக்குள் கொண்டு வந்து அங்கிருந்து படி வழியாக கீழே வந்து இரண்டாவது ரூம்ல வைத்தாங்க.. அதற்கு கொஞ்சம் நேரம் கழித்து தான் உன்னை இங்கு கூட்டிக் கொண்டு வந்தார்கள்.
ஓ... அப்படி என்றால் நாம் வீட்டிற்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கம் போன்ற இடத்தில் இருக்கிறோம்.. அப்படித்தானே.
அப்படி இருக்கலாம் அம்மா..
எது எப்படியோ தாத்தா.. நாம் இங்கிருந்து எப்படியாவது தப்பித்து செல்ல வேண்டும். கார்த்திக்கிடம் எல்லா உண்மையும் சொல்லவேண்டும். கார்த்திகை காப்பாற்ற வேண்டும். இப்பொழுது அதுதான் எனது முதல் வேலை. அதன்பிறகு மற்ற எல்லாவற்றையும் அவன் பார்த்து கொள்ளுவான்.
சரிமா.. இங்கு எல்லாமே சாவி இல்லாமல் வேறு வகையான பூட்டு போல் உள்ளதே..
இங்கு முழுவதும் டிஜிட்டல் லாக் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. நான் வந்த நாளிலிருந்து இதுவரை வெளியே செல்ல முயற்சிக்காமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான்... நாம் எல்லாவற்றையும் தெளிவாக அறிந்து கொண்டு செல்ல வேண்டும் என்பதனால்தான்.
ஏனென்றால் நான் தப்பிப்பதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போய் விடக்கூடாது அல்லவா... அதனால் நாம் நமது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற வேண்டும். அதற்காக தான் இத்தனை நாள் அமைதியாக இருந்தது.
சரிமா நாம் எப்படி வெளியே செல்ல வேண்டும் என்பதை யோசித்து விட்டாயா.
ஆமா தாத்தா...இங்கு உள்ள எல்லா கதவுகளும் சில நாட்கள் ஐந்து நொடியில் லாக் ஆகிறது. சில நாட்கள் 30 நொடிகளில் லாக் ஆகிறது. அதிகபட்சம் 40 நொடிகள் வரை ஓபனில் இருக்கிறது. அந்த 40 நொடிகள் வரை உள்ள நாள் இன்று தான்.
எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறாய் குயிலி...
இந்த டோர் டேட் பிளஸ் அந்த நாளில் எழுத்துக்களை கணக்கு செய்து அந்த நொடிகளை