(Reading time: 15 - 29 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

நைநா நூறுவா தா .......

எதுக்கு உனக்கு இம்புட்டு காசுடே .......

என்ன நைநா எல்லாருக்கும் சுவீட்டு குடுக்கனுமுனு சுவீட்டு வாங்கிட்டு வர சொன்னுச்சு அத்த......

அது சேரி உங்கிட்ட காசில்லையாக்கும்.

எங்கிட்ட காசு ஏது நைநா நா (ன்)என்ன வேல வெட்டிக்கு போய்ட்டு இருக்குற மாறி  கேக்குற...... என்று மகன் முகத்தை தொங்கபோட்டு கேட்டவுடன்.....

சரி வாய்யா நாம கதிர் வந்துருப்பா(ன்) அவங்கிட்ட சொல்லி வாங்கி தாரே...

சேரி நைநா அப்ப வூட்டுக்கு வெரசா போவோம் வா......

சினிமாவுக்கு சோடி போட்டு போவாகலாம் வூட்டுல  குடிக்க தண்ணீ இல்ல.....

லச்சுமி........ஏ புள்ள லச்சுமி.....

என்னத்த.......

நா முன்னால போய் குடத்த வச்சு இடம் போட்டு வக்கிறே...... நீ வெரசா வந்து சேருபுள்ள.......

சரித்த என்று முகத்தை தொங்கபோட்டு சொல்லிவிட்டு, கிணத்தடியில் இருக்கும் தன் கணவனிடம் பாருங்க உங்கம்மா என்ன தண்ணி தூக்க செல்லுது.

ஏன்டி தண்ணி தானடி தூக்க சொல்லுது. போய் வேலைய பாருடி.

ஏய்யா வெளிய இருக்கமட்டு அப்புடி கொஞ்சிபுட்டு திரிஞ்ச... வூட்டுக்குள்ள வந்தா உங்க அம்மா பேய் புடிச்சுடுமோ..... சை.........

ஆத்தா.... மாரியாத்தா..... நான் காணுறது கனவா....நினவா...... எம்புள்ளயா இப்புடி வந்து நிக்கிறான். எம் பேச்ச மீறி ஒரு வார்த்த பேசாத புள்ளையா இது கடவுளே. இந்த அநியாயத்த கேக்க யாருமில்லையா...... ஏன்டா அன்பு இங்க வந்து பாருடா உன் தம்பி பண்ணிருக்க காரியத்த..... இந்த மனுசன் எங்க போய் தொலைஞ்சாரு  தெரிலயே...... அம்மாவு அப்பாவு செத்து போன மாறி இப்புடி எவளயோ கல்யாண கட்டி வந்து நிக்கிறானே!!!!!!! என்று கமலாம்மா புலம்பிகொண்டிருக்க........

      இவர் போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் கூட, அன்பும் அவன் மனைவி வாசலில் இருந்த இருவரை பார்த்து வாயடைத்து நிற்க, அருணாச்சலமும் அவன் மூத்த மகன் அப்போதுதான் வீடு வந்து சேர்ந்தனர் . வீட்டின் முன் கூட்டமும் கூச்சலுமாக இருக்க..... கூட்டத்தை விலக்கி வந்த இருவரும் அதிர்ச்சியடைய........

கதிரேசனும், பிரியதர்ஷினியும் மாலையும் கழுத்துடன் அங்கு நின்றனர்.

பாருய்யா பாரு உம்புள்ள பண்ணிருக்க காரியத்த.....

10 comments

  • Thank u so so much bro first time long comment i m vry happy to c tis comment bro. Ipdi comment pana enaku boost kudichamari irukupa. Again thank u bro
  • Ada da yena oru proposal 😍😍😍 nu solluradha illai yena family da idhu nu solluradha 😱😱 anyway I liked kadhir's olivu maraivu illadha love proposal to dharshini and his "nga" mannerism 👌😍😜 at the same time ivanga nga mannerism Partha ivanga marriage mudinjadha illayanu theriyalaiye :Q: 😉😉 Priyadarshini firmness super 👍<br />Singakutti oda appa vetti officer ah ena oru perumaiya sollikuraru..... <br />Kadhir sole bread winner aga illana kamala thurathi vitu irupanga pole steam <br />Cool and intersting kick off ma'am 👏👏👏👏👏👏👏 look forward to see what happens next.<br />Thank you and wish you good luck.
  • அவ லவ் ப்ரொபோசல் பத்தி கேட்டா இவன் கல்யானம் பற்றி சொல்றான். அருமையான தொடக்கம். சூப்பர் கல்யானம்

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.