“முடியும்” அடித்துச் சொன்னாள் சரண்யா.
“அதான் எப்படி?”ன்னு கேட்கிறேன்”
“ம்ம்ம்...எனக்கு...சொல்லத் தெரியலை!...அவர் கிட்டக் கேட்டுப் பாருங்க...சொல்லுவார்” ரவீந்தரின் முகத்தையே பார்த்திராத சரண்யா ரவீந்தரின் மார்க்கெட் திறமைக்கு சான்றிதழ் தந்தாள்.
“அது செரி...ஏற்கனவே அவன் நாத்திகம் பேசுவான்!...இதுல இதையும் சொல்லிக் கேட்டா...அவ்வளவுதான்!...அத்தனைக் கடவுள்களையும் காது குடுத்துக் கேட்க முடியாத அளவுக்குக் கரிச்சுக் கொட்டுவான்!...எங்கெங்கோ நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் மேற்கோள் காட்டிப் பேசுவான்!...கேட்கிறவங்க பைத்தியமாயிடுவாங்க!” குறுஞ்சிரிப்புடன் சொன்னார் சுதாகர்ஜி.
“எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுத்தான் பாருங்களேன்” கெஞ்சிக் கேட்டவள் கொஞ்சிக் கேட்க ஆரம்பித்தாள்.
“என்னடி?..என்ன கேட்க சொல்றே?” கோபமாகவே கேட்டார்.
“எங்க கோயிலும் ஃபேமஸ் ஆகணும்...நல்லா வருமானம் கொழிக்கணும்...அதுக்கு என்ன செய்யறது?ன்னு கேளுங்க”
“ம்ஹூம்...நான் மாட்டேன்!...என் நிலைமையை நானே இறக்கிக் கொள்ள மாட்டேன்!...நான் “நல்ல செல்வாக்கோட...நல்ல வசதியோட வாழ்ந்திட்டிருக்கேன்”னு அவன் நெனச்சிட்டிருக்கான்...அது அப்படியே இருக்கட்டும்” என்று சொல்லி விட்டு சரண்யாவை மேற் கொண்டு பேச விடாமல் திரும்பிப் படுத்துக் கொண்டார் சுதாகர்ஜி.
கட்டிலிலிருந்து எழுந்தவள் முனகிக் கொண்டே சென்று லைட்டை ஆஃப் செய்தாள்.
தொடரும்...
Next episode will be published on 15th Jan. This series is updated weekly on Fridays.