ஸ்தானத்தில் இருக்கான். இது சத்தியம். அது தெரியாம நீங்க அவனுக்கு பொண்ணு தேடிட்டு இருக்கறது எனக்கு சரியப்படலை. என்று வருத்தத்துடன் கூறினார்.
ஒரு நிமிடம் பார்வதி அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. நீங்க என்ன சொ ல் றி ங் க......... என்று திக்கி திணறி கேட்டார்.
நீங்க சொல்றதை வச்சு பார்த்த அப்ப என் ஆதிக்கு கல்யாணம் ஆகிடுச்சா???? என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
அம்மா..... உங்க பையன் ஆதிக்கு கல்யாணம் அச்சா இல்லையானு எனக்கு தெரில.... ஆனால், நான் படிச்ச சாஸ்திரத்தின் மீது சத்தியம் அவன் இப்பொழுது ஒரு குழந்தைக்கு தந்தை என்பது உண்மை.
அப்போ.... அவனது மனைவி யார்?????
அது எல்லாம் என்னால் சொல்ல முடியாதும்மா.... உங்க மகன் ஆதியோட நட்சத்திரமும் பகவான் ராமனின் நட்சத்திரமும் ஒன்னும்மா. எனக்கு தெரிஞ்சு உங்க மருமக மாசமானதும் அவ உங்க மகனை விட்டு பிரிஞ்சு போயிருப்பாங்க.... இது இவங்க ரெண்டு பேரோட விதி..... அதை நம்ம மாத்த முடியாதும்மா.....
உங்க வீடு இப்ப இருக்குற நிலைமையை உங்க அத்தை பேச்சியம்மாள் எனக்கு ஏற்கனவேயே சொல்லிட்டாங்க.
நான்தான் அவங்களை குலதெய்வ பூஜை செய்ய சொன்னேன்... அதும், ஆதியின் மனைவியை செய்ய சொல்லி இருந்தேன். அதனால் தான், உங்க கணவர் உடம்பு முடியாம இருக்குற இந்த நிலைமையிலும் கூட அவங்க ஆதிக்கு திருமணம் செய்து வச்சு பார்க்கனுன்னு நினைக்குறாங்க.
ஆனா, நான் இப்பதான் ஆதியோட ஜாதகம் பார்த்தேன்.... அப்பா ஸ்தானத்தில் இருக்கறவனுக்கு எப்படி நாம திருமணம் செய்து வைக்க முடியும். அது பாவம் இல்லையா??????
உங்க கணவரோட உயிரை காப்பாத்துன்னுனா சீக்கிரம் உங்க மருமகளை தேடி கண்டுபிடிங்க.... உங்க மகன்கிட்ட பேசி உண்மையை தெரிஞ்சுக்கோங்க ..... என்னை பொறுத்தவரைக்கும் உங்க மருமக உங்க வீட்டுக்கு வந்துட்டா எல்லா பிரச்சனையும் சூரியனை கண்ட பனிபோல மறைஞ்சுபோயிடும் இது சத்தியம்......
ஆனா, அதேயே நேரம் உங்க மருமகளை நீங்கதான் பத்திரமா பார்த்துக்கணும் ....... உங்க மகன் இராமன் தான். அதேயே போல உங்க மருமகளும் சீதையா தான் இருப்பா ..... உங்க வீட்டுக்கு அவ வந்த பின்னாடி நீங்க எல்லாரும் சந்தோசமா இருக்கலாம்.... ஆனா, அவளுக்கு ஒவ்வொரு நாளும் நெருப்பு மேல நிக்குறா மாதிரி தான் இருக்கும் ..... அப்ப எல்லாம் நீங்க