சமாளிப்பது?????
இவை எல்லாவற்றிக்கும் மேல்.... அந்த பெண் யார்???? ஒருவேளை, அகிலாவாக இருந்தால்...... இதை நினைக்கையிலே அவரது மனதில் ஒருவித சந்தோசம் ஏற்படுவதை அவரால் உணர முடிந்தது. அத்தோடு மட்டும் இன்றி அகிலா என் வீட்டு வாரிசை சுமந்து கொண்டு தான் எங்களை விட்டு பிரிந்து சென்றாளா???? ஏன்?????????
இப்பொழுது எங்கு என்று சென்று அவளை கண்டுபிடிப்பது ஆதிக்கு மட்டுமே அவளை பற்றி தெரியும் ஆனால், அவனிடம் அகிலாவை பற்றி கேட்க அவர்க்கு பயமாக இருந்தது.
ஒருவேளை, அந்த பெண் அகிலாவாக இல்லை என்றால் என்று நினைக்கும் போதே பார்வதி அம்மாளுக்கு ஏனோ தலை சுற்றுவது போல இருந்தது.... அதிகப்படியான யோசனை, மனஅழுத்தம் தனது கணவரின் உடல்நிலையை நினைத்து கவலை படுவதால் தற்போது எல்லாம் அவர் ஒழுங்காக சாப்பிடுவதும் இல்லை..... எல்லாம் சேர்த்து அவரது இரத்த அழுத்தத்தை அதிகம் அடைய செய்தது.... தன்னை அறியமாலேயே ஆதியின் மீது சரிந்து விழுந்தார்.
தீடிர் என்று தனது அன்னை மயக்கம் அடைந்ததும் ஆதி என்ன செய்வது என்று ஒன்றும் புரியாமல் விழித்தான். பின்னர் தனது கார் யை ஒரு மரத்தடியில் நிறுத்தினான்.
கார்யில் இருந்த தண்ணீரை எடுத்து தனது அன்னையின் மீது பதட்டத்துடன் தெளித்தான்.
அதில் சிறிது தெளிந்தவர்..... தண்ணி தண்ணி என்று குடிக்க தண்ணீர் கேட்டார். அப்பொழுதான், கார்யில் வேறு தண்ணீர் இல்லை என்று ஆதிக்கு புரிந்தது. அவன் கார் நிறுத்தி இருக்கும் இடமோ வயலால் சூழ்ந்து இருந்தது வீடோ கடையோ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை.... வேகமாக கார் கதவுகளை காற்று உள்ளேயே போகும்படி திறந்து விட்டவன்.... பக்கத்தில் எங்கேனும் தண்ணீர் கிடைக்குமா என்று பார்க்க சென்றான்....
அம்மா... அம்மா ..... என்னை பாருங்க..... இங்க பக்கத்துல இருக்குற வீட்டில் இருந்து தண்ணீர் வாங்கிட்டு வந்துடுறேன்.... பயப்படாதீங்க இதோ வந்துடுறேன்..... என்று கூறிவிட்டு கடவுளேயே என் தாயை நான் வரும் வரை பத்திரமாக பார்த்து கொள் என்று மனதில் வேண்டி கொண்டு அவசரமாக ஓடினான்.
அவன் சென்ற சிறிது நிமிடங்களில் ..... பார்வதியின் உடல் மேலும் மோசமானது..... அவரது உடலுக்கு தண்ணீர் தேவைப்பட்டது.... அவரது நாக்கு உலர்ந்து விட்டது...... தண்ணி தண்ணி என்று ஈன சூரத்தில் முனகினார்.
அப்பொழுது அவர்க்கு ஒரு சிறு வாட்டர் பாட்டளின் மூலம் யாரோ தண்ணீர் தருவது போல உணர்ந்தார்.... மயக்க நிலையில் இருந்ததால் அவரால் தனக்கு தண்ணீர் தருவது யார் என்று பார்க்க முடியவில்லை.