வேலைக்கு போயிட்டா. சோ மீட் பண்ண சான்ஸ் இல்லை. மீட் பண்ணி இருந்தா அவ தலைவலி-னு சொல்லி ஆபீஸ் விட்டு வெளியே வந்தப்பதான் மீட் பண்ணிருக்கீங்க. அதுவும் சாதாரண விஷயம்னா நீங்க இந்த டைம் ல வரமாட்டீங்க. முக்கியமான விஷயம்-னா தான் வருவீங்க. சோ தட் கெஸ்ட் இட் .
அவளின் வியக்கும் பார்வை பார்த்து கைதட்டி பாராட்ட..
அண்ணா போதும் போதும் இந்த காபி குடிச்சிட்டு மேட்டர் - அ சொல்லுங்க.
தேங்க்யூ மா...
யுவர் வெல்கம் ப்ரோ...
ஒன்னும் இல்லம்மா கதிர் தான் ஆல்ரெடி உன்கிட்ட சொன்னதுதான்மா. இவ்வளவு நாள் தனியா இவ மட்டும் பாத்துகிட்டு இருந்தா. இப்ப கதிர் கிட்ட இருந்து ரெஸ்பான்ஸ் வந்திருக்கு. ஆனா அது குட் ரெஸ்பான்ஸ் இல்லை அதுதான் பிரச்சினையே.
நான் காலையிலேயே நினைச்சேன் அண்ணா. நான் ஆஃபிஸ் உள்ள போறேன் கதிர் சார் என்கிட்ட அட்ரஸ் கேட்டாரு, அப்புறம் உள்ள போனா இவள காணோம் தலைவலி மெசேஜ் பண்றா... அப்பவே புரிஞ்சுருச்சு. இப்ப நீங்க சொன்னதும் கன்ஃபார்ம் ஆயிடுச்சு.
நீ ரொம்ப ஷார்ப் தங்கச்சி...
அடிபட்டு வந்த அனுபவம் மாறாது ணா.. அவன் அவள் தலையில் கை வைத்து ஆறுதல் கூற...
சரி விடுங்க அண்ணா இன்னொரு முக்கியமான மேட்டர்...
என்னம்மா...
அந்த ஆபீஸ்ல கார்த்திக் கதிரோட ஃபிரெண்ட் தெரியுமானா...
கார்த்திக் கேள்வி பட்டு இருக்கேன் மா...
ம்ம்....அவர நான் ஆல்ரெடி மீட் பண்ணிருக்கேனா என்று முதலில் இருந்து ஆரம்பித்தவள். அனிதாவை கதிருக்கு பெண் கேட்கும் படலம் வரை பேசி முடித்தாள்.
சிறிது நேரம் யோசித்தவன் அது சரியா வருமாமா.
எனக்கு என் பிரண்டோட வாழ்க்கை நல்லா இருக்கனும்.அதே நேரம் அவ மனசுக்கு புடிச்சவனாகவும் இருக்கணும் அண்ணா அதான் உங்ககிட்ட சொல்றேன்.
ம்ம் ....நானும் நிறைய தடவை அனி கிட்ட பேசிட்டேன்.அவ முடிவ மாத்திக்க மாட்டானு தெரிஞ்சிருச்சு. அப்ப அவுங்களா பேசுறாங்கனா நாம முடிவெடுத்து தானே ஆகணும்.
அது ஓகே அண்ணா கதிர் ஒத்துக்குவாரா???
இவ்வளவு நாள் எப்படி தெரியல ஆனா இப்ப அவுங்க அம்மா சொன்னா ஒத்துப்பார்னு தான்