அவளைப் பாவமாக பார்த்தவள் சரி ஊருக்கு போய்ட்டு வரியா என்று கேட்க,
அதெல்லாம் வேணாம் மொழி நீ கிளம்பு. ஸ்வேதாவ நான் பாத்துகுறேன்.
ஸ்வேதாவை பள்ளியில் விட்டுவிட்டு கூட்டி வருவது அனிதாவின் வேலை. நேற்று காலை மட்டும் தேன்மொழியை அனுப்பி வைத்தாள். எப்பொழுதும் போல அவளை பள்ளியில் விட்டவள். வீட்டிற்கு வந்து சிறிது நேரம் படுத்திருந்தாள். அதுவே அவளுக்கு போர் அடிக்க எழுந்து டிவி யை ஆன் செய்தாள். அதில் சிறிது நேரம் கழித்தவள் சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்று சும்மாவா சொன்னாங்க என்று தனக்குள்ளே பேசியவள் வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டால் பிறகு சமையல் என தன்னுடைய மனதை கதிரிடம் செல்லாமல் கட்டுப்படுத்தி வேறு செயல்களில் ஈடுபடுத்த முயன்றால், முயற்சி மட்டுமே... முடியவில்லை அவளால் என்னை பார்த்து இப்படி பேசும் அளவிற்கு கல்மனதா உனக்கு. கண்ணீரை கட்டுப்படுத்தியவள் அழமாட்டேன். என்னுடைய உண்மையான அன்பை கொச்சைப் படுத்தி விட்டாயடா -... நீ என்னை புரிந்து கொள்ளவே மாட்டாயா....அன்பே.
இப்படியே நான்கு நாட்கள் சென்றது. அவள் வருவாள் என்று அடுத்த நாளே எதிர்பார்த்த கதிருக்கு ஒரு வாரம் வர மாட்டாள் என்பதை தாமதமாகத்தான் கார்த்திக் கூறினான்.
அதைக் கேட்டவன் குதி குதி என்று குதித்துவிட்டான். என்னோட அனுமதி இல்லாமல் எதுக்கு அப்ரூவல் கொடுத்த என்று கார்த்திக்கை ஏத்து ஏத்த,
போதும் நிறுத்து கதிர். அவள் வேலையில் சேர்ந்து இதுவரை ஒரு நாள் கூட லீவு போட்டது இல்லை. உனக்கு தெரியுமா ஒரு மாசத்துக்கு ஒரு லீவுன்னு வச்சா கூட அவளுக்கு 36 நாள் இருக்கு. அவ இப்ப 7 நாள்தான் லீவு கேட்டு இருக்கா. ஓகே நீ ஓவரா பண்ணாத....
கார்த்தி கூறிய அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்தவன் அமைதியாக இருந்தான் ஆனால் மனம் அமைதி ஆக வில்லை.
அவளைப் பார்க்காமல் அவனால் இருக்க முடியவில்லை. ஆனால் இதை காதல் என்றும் அவன் கூறவில்லை. இது எந்த விதமான உணர்வு என்பதையும் அவன் அறியவில்லை. ஆனால் அவளை பார்த்தாக வேண்டும் என்பது மட்டுமே அவன் மனதில் இருந்தது. நான்கு நாட்கள் வரை பொறுத்து பார்த்தவன் ஐந்தாவது நாள் காலையில் கார்த்திக்கிடம் மீட்டிங் அட்டென்ட் செய்து விட்டு செல்லுமாறு அனிதாவிடம் கேட்கச் சொன்னான்.