தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 13 - ஜெபமலர்
படுத்த சிறிது நேரத்தில் உறங்கி விட்டாள் ஜனனி. ஆனால் நேரம் ஆக ஆக உடல் நடுங்க உறக்கம் தடைபட்டது. விழித்து பார்த்தவள் அறையில் ஏசி போடப்பட்டு இருந்ததை கவனித்தாள். அதோடு ஃபேன் ஓடுவதையும் பார்த்தவள் எழுந்து சுவிட்சை ஆஃப் செய்து விட்டு ஏசியை குறைத்து வைத்து விட்டு மீண்டும் படுக்கையில் படுத்தாள்.
அவள் கண்களில் எதிரில் ஷோபாவில் படுத்து இருந்த ஜனாவின் நெற்றியில் இருந்த வியர்வை துளிகள் பட்டது.
ஏசி டெம்பரேச்சர் குறைத்ததும் வியர்த்து விட்டதா என்று யோசித்தவளுக்கு ஷோபாவில் காலை மடக்கி கஷ்டப்பட்டு படுத்திருப்பவனின் நிலை புரிந்தது.
நேராக வந்து அவன் அருகில் வந்தவள் அவனை எப்படி எழுப்புவது என்று சுற்றி சுற்றி பார்த்தாள். தூக்கத்தில் அவள் அணைப்பில் இருந்து சிறிது விலகி இருந்த தலையணையை பிடித்து இழுக்க அடுத்த நொடி அவன் தூக்கத்தில் இருந்து எழுந்தான்.
மிக அருகில் நின்ற அவளை பார்த்ததும் பதறி போய் எழுந்தவன் என்னாச்சு... ஏதும் பிரச்சனையா என்று பதட்டத்தோடு கேட்க அவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் திரு திருவென்று விழித்து கொண்டு நின்றாள்.
அவள் பதில் பேசாமல் நின்றதைக் கண்டதும் கோபத்தில் தனு நல்லா இருக்கா தானே என்று கேட்டான்... இல்லை இல்லை கத்தினான்...
அவள் பதில் பேசாமல் இல்லை என்று தலையசைக்க நிம்மதியானவன் அப்புறம் ஏன் என்னை எழுப்பின என்றான்.
என்ன சொல்வது என்று தெரியாமல் ஃபேன் ஓடல என்றாள். அவளை விசித்திரமாக பார்த்தவன் ஷோபாவை விட்டு எழுந்து சென்ற அடுத்த நொடி அவன் தலையணை பெட்ஷீட்டை எடுத்து பெட்டை நோக்கி எறிந்தவள், குட் நைட்... அங்கு படுத்து நிம்மதியாக தூங்குங்கள் என்று சொல்லி விட்டு ஷோபாவில் படுத்து கொண்டாள்.
ஜனனியின் செயல் ஆத்திரத்தை ஏற்படுத்த மோகினி பிசாசு கூட இருந்தால் கூட இவ்வளவு தொல்லை இல்லை போல என்றவன் திரும்பி படுக்க... மோகினி பிசாசை வரவழைத்து படுத்து பார்த்து விட்டு அப்புறம் சொல்லனும் என்றாள் பதிலுக்கு...
எங்கே போய் தேடி கண்டுபிடித்தாளோ என்று புலம்பியவன் ஒரு வழியாக தூங்கியும் போனான்.
வழக்கமாக ஐந்து மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்ய தொடங்குபவனுக்கு அன்று 4 மணிக்கே விழிப்பு வந்து விட்டது. புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வராததால் எழுந்து அமர்ந்தவன் நிம்மதியாக தூங்கும் ஜனனியைப் பார்த்தான்.