(Reading time: 10 - 20 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

ஜனனி சாப்பிடாமல் அமர்ந்து இருப்பதைப் பார்த்தவன்... தனு செல்லம் உன் அம்மாவை சாப்பிடவில்லையா.... இரவு உணவு சேர்ந்து சாப்பிடனும்னு நீ சொல்லவில்லையா என்றான்.

அம்மா... என்று தனு சொல்லி முடிப்பதற்குள் தனக்கு தேவையானதை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள் ஜனனி. மூவரும் சேர்ந்து சாப்பிட்டனர். ஏதோ மனதில் ஒரு வித அமைதி நிறைந்திருப்பதை உணர்ந்தான் ஜனா..

அமைதியாக அவன் சாப்பிட தனுவோ ஜனனியிடம் பேசிக் கொண்டே இருந்தாள். தனுவிற்கு ஊட்டி விட்டவள் தானும் சாப்பிட்டு விட்டு பாத்திரங்களை எடுத்து சிங்கில் போட்டு விட்டு தனுவுடன் அறைக்குள் சென்றாள்.

அப்பா... நீங்களும் வாங்க என்று தனு அழைக்க வேலை இருப்பதாக சொல்லி தப்பித்து கொண்டான்.

ஜனனியிடம் கதைக் கேட்டுக் கொண்டே தூங்கி போனாள் தனு.

தனு தூங்கியதும் மீதி இருந்த வேலையை முடித்து விட்டு ஹாலில் இருந்த ஷோபாவில் அமர்ந்து மொபைலை பார்த்து கொண்டு இருந்தாள் ஜனனி.

சிறிது நேரத்தில் தூங்கம் கண்ணை கட்ட மொபைலை வைத்து விட்டு தூங்க சென்ற ஜனனிக்கு ஜனா தன் அறையில் இருந்து பேசுவது கேட்டது.

ஸ்வீனா... நான் சொல்வதைத் கேள்... நீ திட்டமிட்டு திருமணதத்தை நடத்தி வைத்து விட்டாய். அதற்காக அவள் என் மனைவி ஆகி விட முடியாது. எனக்கு எப்போதும் நீ முக்கியம். நாளைக்கே பணத்தை ஏற்பாடு செய்கிறேன். உன்னை தனியாக அனுப்ப முடியாது. அஸ்விட் தாய்லாந்து கிளம்பியதும் நான் உன்னை அழைத்து செல்கிறேன் என்றான்.

மறுமுனையில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதன் அறிகுறியாக அமைதி நிலவியது. மீண்டும் பேச ஆரம்பித்த ஜனா.... அவளிடம் நீ எதையும் சொல்ல வேண்டாம். சொல்லி விட்டு தான் நாம் கிளம்ப வேண்டும் என்பது அவசியமில்லை என்றான்.

ஏனோ அதற்கு பிறகு அவன் பேசிய எதுவும் காதில் விழவில்லை. ஜனனிக்கும் நின்று ஒற்று கேட்க விரும்பவில்லை. ஆனால் முதன் முறையாக நிறைய கேள்விகள் எழுந்தது.

அதில் முதல் கேள்வி ஸ்வீனா யார் என்பது தான். எப்போதும் அண்ணா அண்ணா என்று ஸ்வீனா சொல்வது போல இருவரும் அண்ணன் தங்கை இல்லை. அதுபோல உறவினர்களும் இல்லை என்பதை திருமண நிகழ்ச்சியில் தெரிந்து கொண்டாள். 

முதலில் ஸ்வீனாவிடம் இது பற்றி கேட்க வேண்டும் என்று எண்ணியவள் படுத்து நிம்மதியாக உறங்கி போனாள். ஆனால் அவள் விடை தெரிந்து கொள்ளும் முன்பே பல அதிர்ச்சி தரும் விஷயங்களை மூன்றாவது நபர் மூலம் தெரிந்து கொள்ளபோகிறாள் என்பதை உணரவில்லை.

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her episode.

Go to Ullam kollai poguthe story main page

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.