தொடர்கதை - கனவே கலையாதே.... - 03 - தனுசஜ்ஜீ
என்ன நம்புறீங்களா தர்ஷு...
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
நான் என்ன பண்ணாலும் உங்க நல்லதுக்காகத்தான் நான் பண்ணுவேன்னு நம்பிக்கை இருக்காங்க.
100% கதிர்.
அவன் முகத்தில் நிம்மதி புன்னகை இனிமே இதப்பத்தி கவலைப்படாமல் போங்க. நான் சொல்றத மட்டும் செய்யுங்க. உங்க அட்ரஸ் கொடுங்க மத்ததை நான் பார்த்துக்கிறேன்.
அவள் அவனை குழப்பமாக மேலிட ....
எனக்கு இந்த முகம் பிடிக்கவே இல்ல. உங்க கண்ளையே தைரியத்தை காட்டுவீங்களே அந்த முகம்தான் பிடிக்கும்.
சிறு புன்னகையுடன் தலையாட்டிக் கொண்டே அவள் எழ.
தர்ஷு......நான் திரும்பவும் கேட்கிறேங்க, நான் என்ன பண்ணாலும் உங்களுக்கு ஓகே தான....
ஏதோ வில்லங்கமா பண்ண போறீங்கனு மட்டும் தெரியுது. ஆனா என்னை இந்த பிரச்சினையிலிருந்து காப்பாத்திடுவீங்கனு நம்பிக்கை இருக்கு கதிர்.
தேங்க் யூங்க..
இருவரும் சிறு நிம்மதியுடன் விடைபெற்றனர்.
தர்ஷினி எப்பொழுதும் போல் 6 மணிக்குள் வீட்டிற்குள் சென்று விட்டாள்.
அவளை அனுப்பிவிட்டு கதிர் அவனுடைய நண்பன் ஒருவனுக்கு அழைத்துப் பேசி வருமாறு கூறினான்.
இரவு 8 மணி அளவில் கதிர் தர்ஷினி வீட்டை அடைந்தான். அங்கிருந்தவர்கள் இவனை கண்டதும் ஒரு அந்நிய பார்வையை செலுத்தினர். அங்கிருந்த ஒரு நடுத்தர வயது குண்டு பெண்மணி யாரப்பா?? நீ என்று கேட்க...
வணக்கம்மா... உள்ள போய் பேசலாங்களா...
வாப்பா....
உள்ளே நுழைந்தவுடன் ஹாலில் ஐந்து பெண்மணிகள் மட்டும் இருந்தனர்.தர்ஷினியின் சித்தி என்ற பெயரில் மூவரும், அத்தை என்று இருவரும் இருந்தனர். மற்றவர்கள் அவரவர் ஊருக்கு சென்றுவிட்டனர். கருமாதி முடிந்து தர்ஷினியையும் அவர்களடன் அழைத்துச் செல்லும் நோக்கில் இருந்தனர்.
மூத்தவளான கன்னியம்மாள் தான் இவனை வரவேற்று அமர வைத்தாள்.