அவளை கடந்து சென்றவன் மனதில் ஒரே ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது. ஜனனியை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசியதில் இருந்து இதுவரை ஒரு முறை கூட ஸ்வேதாவை பார்ப்பதற்கு என்று என் நேரத்தை ஒதுக்கி செல்லவே இல்லையே.... ஏன் என்று மனம் கேள்வி கேட்க அவனுக்கோ அதற்கு பதில் தேட விருப்பமில்லை.
ஆனால் ஏனோ அவளை நினைத்தவுடன் அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழ தன் அலைபேசியில் ஸ்வேதாவின் எண்ணிற்கு அழைத்தான். வழக்கம் போல அழைப்பு ஏற்கப்படவில்லை.
அவன் மறுமுறை முயற்சிக்க முயல்கையில் அப்பா... என்றவாறே ஓடி வந்து கட்டிக் கொண்டாள் தனு.
அவளை அள்ளி தூக்கி கொண்டவன் ஸ்வேதாவிற்கு அழைப்பதை நிறுத்தி விட்டு சாப்பிட அமர்ந்தான்.
தனக்கானதை எடுத்து வைத்து கொண்டவன் முதல் வாய் தனுவிற்கு ஊட்ட மறுக்காமல் வாங்கி கொண்டவள் டாடி நான் சாப்பிட்டு விட்டேன். நீங்க சாப்பிடுங்க என்றாள்.
ஒரு வாய் எடுத்து வாயில் வைத்தவன் ஜனனியை பார்த்தான். ஆனால் அவளோ அவன் கண் முன்னால் இல்லை... உணவின் ருசி அம்மாவை நினைவு படுத்த ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
ஆனால் எல்லாவற்றையும் மறைத்து கொண்டு தனு செல்லம்... அம்மா சாப்பிட்டாங்களா என்றான்.
இல்லை என்றவள் ஓடி சென்று ஜனனியை அழைத்து வந்தாள். ஜனனியும் எதுவும் நடக்காதது போல இயல்பாக வந்து அவன் அருகில் வந்து அமர்ந்து சாப்பிட்டாள். அவன் சாப்பிட்டு விட்டு கிளம்பியதும் தான் ஜனனிக்கு ரிலாக்ஸாக இருந்தது.
தனுவை தன் டூவீலரில் அழைத்து சென்று மழலையர் பள்ளியில் விட்டு விட்டு வந்தவள் ஸ்வீனாவிற்கு அழைத்தாள்.
அழைப்பை ஏற்றவள் ஜானு அஸ்விட் யூ எஸ் போறதுக்கு தயராகிறான். நீயும் ஏர்போர்ட் வாரீயா ஜானு என்றாள்.
இல்லை ஸ்வீனா... நெக்ஸ்ட் டைம் வரேன். தனுவை பிக்கப் செய்யனும் என்று சொல்ல ஸ்வீனாவோ ஜானு நானும் ஜெய்ப்பூர் போனும். என்னைக்கு என்று தெரியவில்லை என்று சொல்ல ஜெய்ப்பூரா... என்ன விஷயம் என்றாள் ஜனனி.
இவளிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னாரே... இப்போது என்ன சொல்வது என்று