அவளை பார்த்து நேரடியாக முகம் சுழித்தவள் அந்த எம்டி பய கிட்ட ஜாக்கிரதையாக இரு என்றாள்.
ஜனனிக்கு தூக்கி வாரி போட்டது. அதோடு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. எல்லாத்தையும் மறைத்து கொண்டு ஏன் என்றாள்.
ஜனார்த்தனன் தான உங்க எம்டி என்று கேட்க ஆமா என்று தலையசைத்தாள்.
அவன் ரொம்ப மோசமானவன்... கட்டின பொண்டாட்டியை துரத்தி விட்டு விட்டு கூட வேலை பார்க்கிற ஒருத்தி கூட சுத்துறான். அவ.. அதான் அந்த மேனா மினுக்கி அண்ணா அண்ணானு உருகி சொல்றதை பார்த்தா அண்ணன் தங்கைனு நம்பிடுவாங்க. ஆனால் இரண்டு பேரும் மோசமானவங்க.. இப்போ கூட இரண்டு பேரும் நல்லா ஊரை சுத்தனும்னு நினைத்து ஒரு பாவப்பட்ட பிள்ளையை அவனுக்கு கட்டி வைச்சிருக்காங்க... அப்போ தான அவன் பிள்ளையை கட்டிக்கிட்டு வந்தவ பார்த்துகிடுவா... இவுக ரெண்டு பேரும் ஊரை அளக்கலாம் என்றாள் வெறுப்புடன்.
ஆனால் அதை கேட்ட ஜனனிக்கு என்ன பதில் சொல்வது... எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் அமர்ந்து இருந்தாள்.
அந்த பெண்ணோ எம்மாடி... ஒரு சின்ன உதவி... என் செல்போன் அணைஞ்சிட்டு. கொஞ்சம் என் மறுமவளுக்கு ஒரு போன் போட்டு தா என்று கேட்க ஜனனி எதுவும் பேசாமல் அந்த பெண் சொன்ன நம்பருக்கு அழைத்தாள்.
அழைப்பு ஏற்கப்படாமல் நின்று விட அந்த பெண் சரிம்மா... அப்போ நான் மெதுவா நடக்கிறேன் என்று எழ ஜனனியோ, பெரியம்மா நீங்கள் ஏதோ அவரை பற்றி தவறாக புரிந்து இருக்கிறீர்கள் என்றாள்.
யாரை என்றவள் ஓ... அந்த எம்டி பயல சொல்றீயா... எனக்கு இதை சொன்னது யாருனு தெரிஞ்சா இப்படி சொல்ல மாட்ட... அவன் பொண்டாட்டி என் மவளுக்கு தோழி... அவ சொல்லி தான் தெரியும் என்று காதருகே வந்து ரகசியம் பேசுவது போல் சொல்லவும் சசிதரன் வரவும் சரியாக இருந்தது.
தொடரும்
Next episode will be published as soon as the writer shares her episode.