அவங்க குலதெய்வம் கோயில் இருக்கு!”.
“இந்த ஊர்ல உங்க குலத்துக்காரங்க கொஞ்சம் பேர்தான் இருக்காங்க?...அப்படித்தானே?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டான் ரவீந்தர்.
“ஆமாம்!...மொத்தம் இருக்கற ஆயிரத்து இருநூறு வீடுகள்ல எங்க ஆளுங்க...ஒரு...நூத்தம்பது வீடுதான்” என்றார் சுதாகர்ஜி.
“ம்ம்ம்...மாதச் சம்பளம்!ன்னு ஒண்ணு கிடையாதா?....” முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டான் ரவீந்தர்.
“ம்ஹூம்...ஆனா வருஷத்துக்கு ஒரு தடவை அந்த வருஷத்துக்குத் தேவையான அரிசி...பருப்பு...வகையறாக்களை எங்க குலத்திலேயே ரொம்ப வசதியான ஒரு பண்ணைக்காரர் குடுத்திடுவார்...ஆனா...அது பாதி வருஷத்துக்குத்தான் வரும்!...இந்தக் காலத்துல மேல் செலவுகள் எத்தனை இருக்கு?”
“சொல்ல வேண்டியதுதானே?...பத்தலைங்க அய்யா”ன்னு” ரவீந்தர் சாதாரணமாய்ச் சொல்ல,
“அதெப்படிப்பா...தானம் குடுக்கற மாட்டைப் பல்லைப் பிடிச்சுப் பார்க்க முடியுமா?...எங்க குடும்பத்துக்குக் கெடைச்ச உரிமைக்கு நான் கூலி கேட்கற மாதிரி ஆயிடுமல்லவா?” தலையை இட வலமாய் ஆட்டிக் கொண்டே சொன்னார் சுதாகர்ஜி.
“ம்ம்...அதுவும் சரிதான்!” என்றபடி தாடையைத் தட்டி யோசித்த ரவீந்தர், “இப்ப என்ன எதிர்பார்த்து என்னை இங்க வரவழைச்சிருக்கே?” கேட்டான்.
“நீதான் பெரிய ஜீனியஸ் ஆச்சே?...இந்தக் கோயிலுக்கு நிறைய கூட்டம் வரணும்!...வருமானம் அதிகமாகணும்!...பாழடைஞ்சு கிடக்கற கோயில் கட்டிடத்தைப் புதுப்பிக்கணும்!...பழனி...திருப்பதி...ஐய்யப்பன் கோயில் மாதிரி...எங்க கோயிலும் ஒரு பணக்காரக் கோயில் ஆகணும்!...அதுக்கு ஏதாவதொரு ஐடியா குடு” சுதாகர்ஜி சிரித்துக் கொண்டே கேட்டார்.
“பிசினஸ் ஐடியான்னா...ஈஸியா குடுத்திடுவேன்..இது புதுசா இருக்கே?...இதுக்கெல்லாம் நான் குடுக்கற ஐடியா வொர்க் அவுட் ஆகுமா?...ஒரு பொருளைக் குடுத்து.... “இதைப் பற்றிப் பேசி...வித்திட்டு வா!”ன்னு சொன்னா எப்பேர்ப்பட்ட பொருளையும் என் வாய்த்திறமையால் வித்திட்டு வந்திடுவேன்!...ஆனா...இங்க சாமியை அல்ல விற்கப் சொல்றே?” பின் வாங்கினான் ரவீந்தர்.
“அது வொர்க் அவுட் ஆகுதோ?...இல்லையோ?...முயற்சி பண்ணிப் பார்ப்போமே?” சுதாகர்ஜி எதற்கும் தயாராயிருந்தார். வறுமை அவரை அந்த நிலைக்கு ஆளாக்கியிருந்தது.
“எனக்கு ஒண்ணுமே புரியலை...தலையை சுத்துது!...ஒரு ரெண்டு நாள் டைம் குடு ஜி...யோசிச்சுச் சொல்றேன்” என்றான் ரவீந்தர்.
“சரி...யோசி!...யோசிச்சு ஒரு நல்ல தீர்வு சொல்லு!...இப்பக் கிளம்பலாம்”