(Reading time: 5 - 10 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

அப்படி விட்டுற முடியுமா ... நம்ம ஊரு போஸ்ட் மேன் பையன் என் ப்ரெண்ட்கு தம்பி. அவன் இப்போ எனக்காக சந்தியாகிட்ட ப்ரெண்ட் ஆகிட்டான். சந்தியா கடை தொடங்க கூடமாட இருந்து அவன் தான் பார்த்து கொள்கிறான்.

அப்போ சரியான ஆளை பிடிச்சிட்ட... சரி சசி சந்தியாவை சென்னைக்கு கொண்டு வர முயற்சி செய்றேன்.

சரி ஜனனி...

சரி இப்போ கிளம்புவோம்... சசி இது தான் என் அட்ரஸ்... நீ ப்ரீயா இருக்கும் போது வீட்டுக்கு வா என்றாள்.

இருவரும் விடை பெற்று கிளம்பினர். ஜனனி மனதில் பல குழப்பங்கள் சூழ்ந்து இருக்க ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். 

யாரை நம்புவது... யாரை சந்தேகிப்பது என்று எதுவும் அவளுக்கு புரியவில்லை... மீண்டும் ஏதோ சுழலில் சிக்கி கொண்டது போல இருந்தது.

வாழ்க்கையில் ஒரு முறை அடிபட்டால் அடுத்த முறை ஜாக்கிரதையாக இருப்பார்கள். ஆனால் நான் மீண்டும் மீண்டும் மற்றவர்களை நம்பி என் வாழ்க்கையை தொலைத்து விடுகிறேனோ...

இல்லையே... ஸ்வீனா என் மீது காட்டிய அன்பு உண்மை தான்... ஜனா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஸ்வீனா பற்றி நன்கு தெரியும்... அவள் என்னை ஏமாற்ற மாட்டாள். அதோடு சீக்கிரம் அஸ்விட் உடன் திருமணம் நடக்க இருக்கிறது. அதோடு அவள் ஒன்றும் கேரக்டர்லெஸ் இல்லை... அவள் வெரி குட் கேர்ள்... நான் வீணாக யோசிக்கிறேன் என்று தன்னையே சமாதானம் செய்து கொள்ள முயன்றாள்.

ஆனால் அந்த பெண் பேசியது மீண்டும் மீண்டும் மனதிற்குள் வந்தது. அவர்களுக்கு என்னை யாரென்றே தெரியாது. அப்படி இருக்கும் போது என்னிடம் ஏன் பொய் சொல்ல போகிறார்கள்... அவர்கள் ஒன்றும் என்னை தேடி வந்து சொல்லவில்லையே.. தற்செயலாக தானே சொன்னார்கள் என்று மனம் மீண்டும் பேசியது.

ஒற்றை மனமே எதிர் எதிராக வாதம் புரிந்து பட்டிமன்றம் நடத்த தீர்ப்பு சொல்லும் நாட்டாமை யாரென்று தான் தெரியவில்லை...

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her episode.

Go to Ullam kollai poguthe story main page

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.