ரம்யாவுக்கும் தூக்கம் வரவில்லை. தினேஷ் அந்த கடிதத்தைப் படித்திருப்பானா?தன்னுடைய வரிகளை வாசிக்கையில் அவனுடைய உணர்வுகள் என்னவாக இருக்கும்?யோசிக்க யோசிக்க அவளுக்குக் கண்களில் சிறுதுளியும் தூக்கமில்லை. இரவில் சரியாகத் தூங்காவிட்டால் வகுப்பில் ரொம்பத் தூங்கி விழ வேண்டி வரும். அப்படித் தூங்கி விட்டால், வகுப்பெடுக்கும் ஆசிரியர்களை விட தேவி தான் ரொம்பத் திட்டுவாள் என்று கண்களை மூடி தூங்கப் பிரயத்தனம் செய்து எப்படியோ தூங்கிவிட்டாள். மறுதினம், எப்போதும் போல, ரம்யா தினேஷைக் காண அவன் வகுப்புக்குச் சென்றாள். அவன் மட்டும் தனியாக இருந்தான். அவளை அருகில் இருந்த பெண்கள் வரிசையில் ஒரு பெஞ்சில் அமரச் சொன்னான். ரம்யா நான் அந்த லெட்டரைப் படிச்சேன். உன்னை எனக்குப் பிடிச்ச அளவு, உனக்கு என்னைப் பிடிக்குமோன்னு ஒரு பயம் இருக்கும். முதலில் நீ என்னை வெறுப்பாகவே பார்க்கிறன்னு எத்தனயோ நாள் கலங்கிருக்கேன். ஆனால் இப்போ உன் வார்த்தைகளால் நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு சொல்லமுடியல. அந்த நிமிடத்தில் எதிர்பாராமல், சட்டென்று, அவள் கையினைப் பிடித்தவன் “என்னை எப்பவும் விட்டுட மாட்டியே ரம்யா!” என்றான். அவள் கையினைப் பிடித்த கரத்தை தன் இன்னொரு கரத்துடன் சேர்த்துக் கொண்டு, இதயத்தின் அருகில் வைத்துக் கொண்டு, சத்தியமா விட மாட்டேன் தினேஷ்! என்றாள்.”தேங்க்ஸ் ரம்யா!” என்று அவர்கள் கரங்களை விடுவித்த நொடி, “யாருப்பா அது கிளாஸ்ல?” என்ற மிரட்டலான குரல் கேட்க, இருவருமே திடுக்கிட்டும் திகைத்தும் வாசல் புறம் நோக்கித் தத்தம் பார்வையைத் திருப்பினார்கள்.
தொடர்வேன்
Next episode will be published on 31st Jan. This series is updated weekly on Sunday mornings.