அவர்களது சிரிப்பை கலைக்கும் விதமாக வீட்டின் அழைப்பு மணி அலறியது. யாராக இருக்கும்?... இப்படி விடாமல் அழுத்துகிறார்கள் என்று எரிச்சலுடன் வந்து கதவை திறந்தவள் அதிர்ந்து போனாள்.
ஜனா நின்று கொண்டு இருந்தான். அவனை எதிர்ப்பார்க்காததால் அதிர்ச்சியோடு ஆச்சரியமாக பார்த்தவளிடம், என்ன, கரடி மாதிரி வந்து விட்டேனு கோபமா??? அல்லது உங்கள் அந்நியோநியமான நேரத்தில் தொந்தரவு தந்து விட்டேன் என்று எரிச்சலா???.. வர நாட்கள் ஆகும் என்று மகிழ்ந்து இருக்க இப்படி வந்து நிற்கிறானே என்ற அதிர்ச்சியா?... யார் அவன்???? எத்தனை நாள் பழக்கம்???.. அப்பப்பா எவ்வளவு சிரிப்பு????.. மயக்கி வைக்கும் மாய மோகினி தான் நீ???... எப்பப் பா... என்ன ஒரு சிரிப்பு... அந்த சிரிப்பிலே பித்தனாகி போயிருப்பானே அவன்??? என்று அவன் பேசிக் கொண்டே போக அவள் முகம் சுருங்கியது...
நான் பேசுகிறது அருவருப்பாக இருக்கிறதோ... ஆபிஸில் லீவ் போட்டு விட்டு இப்படி வீட்டில் என்று அவன் ஏதோ சொல்ல வருவதற்குள் ஜனனி... என்றவாறே அங்கு வந்தான் சசிதரன்...
அவன் குரல் அருகில் கேட்டதும் ஜனா பேச்சை நிறுத்தியதால் அவன் பேசிய எதுவும் சசிதரனுக்கு தெரியவில்லை.
ஜனாவைப் பார்த்ததும் சசிதரன் உதடுகள் தானாக ஜனா என்றது...
அதைப் பார்த்ததும் ஜனாவின் கோபம் பல மடங்கு அதிகமாகியது. இவனுக்கு என்னை முன்னமே தெரிந்து இருக்கிறது. இவனும் என்னை எதிர்பார்க்கவில்லை... அதனால் தான் அதிர்ச்சியில் ஜனா என்கிறான் என்று தவறான விளக்கத்தை தனக்கு தானே கொடுத்து கொண்டு ஜனனியை பார்த்து முறைத்தான்.
ஜனாவை பார்த்த ஆச்சரியம் மாறாதவனாக ஜனனியின் கற்பனை காதலனே கணவனாக அமைந்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் சசிதரன் அவனைப் பார்த்து சிரித்தான். அவனது அந்த சிரிப்பு முதல் நாளில் சந்தியா சிரித்ததை நினைவு படுத்த ச்ச... என்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.
அவள் தான் ஆம்பிளைங்களை பார்க்காத மாதிரி பார்க்கிறானு பார்த்தால் இவன் ஆம்பிளையா இருந்தும் அதே மாதிரி பார்க்கிறானே... என்ன ஜென்மங்கள்... என்று நினைத்தவனுக்கு ஜனனி மீது கோபமாக வந்தது.
சசிதரனுக்கோ என்ன செய்வது என்று புரியாமல் ஜனனியை பார்க்க அவளோ யோசனையில் மூழ்கி இருந்தாள்.
ஜனனி என்று அவள் கையை பிடித்து உலுக்க நினைவிற்கு வந்தவள் சாரி சசி என்றாள்...
அதன் பிறகு ஓரிரு வார்த்தைகள் பேசியவன் ஜனனியின் வாழ்க்கை சரியில்லையோ என்ற