தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 14 - முகில் தினகரன்
அதைக் கேட்டதும் சுலோச்சனா, “அய்யோ...அய்யோ”என்று பதறுவாள், என எதிர்பார்த்த அர்ச்சனாவை வியப்படையச் செய்யும் விதமாய்,
“ஓ...அப்படியா?...வரட்டும்..வரட்டும்!...அவளும் ஒரு பெரிய மனுஷிதானே வரட்டும்!” என்றாள் சந்தோஷமாய்.
“என்னக்கா இவ்வளவு ஈஸியா “வரட்டும்...வரட்டும்”கறே?...அவ விவகாரம் பிடிச்சவக்கா!...வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டாம எதையாவது வில்லங்கமாய்ப் பேசி...வரனையே கெடுத்திடுவாளே!ங்கற பயமே துளிக்கூட இல்லையா உனக்கு?” முகத்தை இறுக்கமாக்கிக் கொண்டு கேட்டாள் அர்ச்சனா.
“அவ பேசலைன்னா மட்டும் இந்த மாப்பிள்ளை உடனே “ஓ.கே!” சொல்லி...உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவாராக்கும்?...அடிப் போடி...எப்படியும் வழக்கம் போல, “போய்..பதில் சொல்லி அனுப்பறோம்!”னுட்டுத்தான் போகப் போறாங்க!...அப்புறம் வீட்டுக்குப் போயி ஏதாவது ஒரு புதுக் காரணத்தைக் கண்டுபிடிச்சு..என்னைத் தட்டிக் கழிக்கத்தான் போறாங்க...இதுல பயம் எதுக்கு வேணும் பயம்?” சுலோச்சனா அனுபவக் காயங்கள் தந்த வடுக்களை வார்த்தைகளாக்கிக் கொட்டினாள்.
“ப்ச்...ஏன்க்கா நீ எப்பவுமே எதிர்மறையாகவே யோசிக்கறே?” கோபத்தோடு கேட்டாள் அர்ச்சனா.
“அனுபவம் கண்ணா...அனுபவம்!”
“ச்சை...உன் கூடப் பேசினா எனக்குத்தான் பிரஷ்ஷர் ஏறும்!” என்று சொல்லி விட்டு, அந்தச் சிறிய ஜன்னல் வழியாக கூடத்தைக் கவனிக்க ஆரம்பித்தாள் அர்ச்சனா.
அங்கே மற்றவர்கள் எல்லோரும் கலகலப்பாய்..சிரித்த முகத்தோடு ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, வீட்டு ஓனரம்மா மட்டும் இறுகிய முகத்தோடு, கடுகடுவென்று அமர்ந்திருந்தாள். யாருடனும் பேசவில்லை, அங்கு நிலவிடும் மகிழ்ச்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“அக்கா...அந்த சனியனோட முகமே சரியில்லைக்கா...பொறாமை வழியுது!...ஆங்காரமும்..ஆவேசமும் உள்ளார பொங்கிக்கிட்டு இருக்கு!” அர்ச்சனா சொல்ல,
“ஆமா...அது பொறாமைப்படற அளவுக்கும்..ஆவேசப்படற அளவுக்கும் இப்ப இங்க என்ன நடந்திட்டுது?...இன்னும் அவங்க பொண்ணை வரச் சொல்லிப் பார்க்கவேயில்லை...பார்த்ததுக்கு அப்புறம்தானே தெரியும் பொறாமைப்படறதா?...இல்லை பரிதாபப்படறதா?ன்னு!...போடி...நீயும் உன் வர்ணனையும்?” என்றாள் சுலோச்சனா வெறுப்பாய்.
அப்போது கூடத்திலிருந்து சுலோச்சனாவிற்கு அழைப்பு வர, அவசர அவசரமாய் மேக்கப்பிற்கு ஃபைனல் டச் செய்து அவளை அனுப்பி வைத்தாள் அர்ச்சனா. மறக்காமல் தான்