இல்லை என்றும் சொல்லிவிட வேண்டும் என்று வேகமாக தன் மொபைலை எடுத்து பார்த்தவளுக்கு அப்போதுதான் புரிந்தது.
அந்த பெண்மணியின் பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை. அந்த பெண் சொன்ன செய்தி பற்றி யோசிக்கவும் விரும்பாததால் அந்தப் பெண்மணி நம்பரை அளித்து விட்டது புரிந்தது.
அவசரப்பட்டு விட்டோமோ... இல்லை என்றால் இப்போது தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாம் என்று வருந்தினாள்.
சரி போகட்டும்... இனி ஸ்கூலுக்கு போகும் போது என்றாவது ஒருநாள் அந்த பெண்மணியை பார்க்கத்தானே போகிறோம்.. அன்று சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டு தன் கவலைகள் எல்லாவற்றையும் தள்ளி விட்டு குழப்பங்கள் நீங்கி விட்டதால் சந்தோஷமாக தன் வேலையை தொடங்கினாள்.
அதன்பின் வந்த ஒவ்வொரு நாட்களும் ஒரு விதத்தில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்தது ஜனனிக்கு.
அன்று காலையில் வேகவேகமாக காலை டிபனை செய்தவள் அதைப் பரிமாறுவதற்கு டைனிங் டேபிளுக்கு எடுத்து வந்தாள். அன்று காலை சீக்கிரமாகவே கிளம்ப வேண்டும் என்று நேற்றே ஜனா சொல்லியிருக்க அரக்கப்பரக்க ஓடி வந்தவள் தன் எதிரே வந்த ஜனாவை கவனிக்க மறந்து அவன் மேல் இடித்துக் கொள்ள அவள் கொண்டு வந்த சாம்பார் இருவர் மீதும் அழகாக பட்டு வர்ணம் பூசி மகிழ்ந்தது.
போச்சுடா... சாதாரணமாக தவறே செய்யவில்லை என்றாலே கோபத்தில் கத்துவான்.. இன்று மொத்த தவறும் தன்மீது இருக்க என்ன நடக்க போகிறதோ என்று பயந்து கண்கள் விரிய அவனையே பார்த்தவள் மெதுவாக சாரி என்றாள்.
பரவால்ல... தெரியாமல் தானே நடந்தது என்றவன் அங்கிருந்து நகர்ந்து விட பெண்ணவளுக்கோ ஆச்சரியம் ஆகிப்போனது.
எப்போதும் எது கேட்டாலும் அமைதியாக செல்பவன் இன்று பதில் சொல்லிவிட்டு போக அதோடு கோபப்படாமல் நிதானமாக பேசி விட்டு செல்ல ஏனோ மனதில் ஒருவித நிம்மதி பரவியது.
சிறிது நேரத்தில் உடைமாற்றி வந்தவன் நீ இன்னும் கிளம்பலையா டைம் ஆயிற்று என்று சொல்ல அவளும் வேகமாக சென்று வேறு உடைக்கு மாறி வந்து சேர்ந்தாள்.
தனுவை அழைத்துக்கொண்டு ஸ்கூலில் விட்டுவிட்டு இருவரும் ஆபிஸ் சென்றனர். அதுவரை கண்டும் காணாமல் இருந்த ஜனா இப்பொழுதெல்லாம் சில நேரங்களில் ஜனனியிடம் பேச தொடங்கி இருந்தான்.
பேசுவதற்கு முன்பாக அவனுடன் அந்த வீட்டில் இயல்பாக இருந்தவளால் அவன் பேச