(Reading time: 7 - 14 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

ஆஃபர் போடறான்!...கல்லூரிகள் போட்டா போட்டி போட்டுக்கிட்டு சலுகைகளையும், கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிச்சு மாணவர்களை ஈர்க்குது!....ஜோசியக்காரன்...சாமியார்...ன்னு எல்லோருமே டி.வி.லே தனி புரோக்ராமே பண்றாங்க!...அதனால...நான் சொல்ற யோசனைகள் உமக்கு ஓ.கே.ன்னா சொல்லுங்க நாளைக்கே ஆரம்பிச்சிடறேன்!” உற்சாகமாய்ச் சொன்னான் ரவீந்தர்..

“எப்படி ஆரம்பிக்கப் போறே?”

“உங்க கோயில்ல வழக்கமா எந்த நாள்ல கூட்டம் அதிகமாயிருக்கும்?”

“ம்ம்ம்...உப்பாயம்மனுக்கு உகந்த நாள் புதன் கிழமை!...அன்னிக்கு ஊர்ல இருக்க்ற எங்க குலத்துக்காரங்க...ஓரளவுக்கு எல்லோருமே வருவாங்க” என்று சுதாகர்ஜி சொல்ல,

“ஓ.கே...அப்ப நான் புதன் கிழமை அங்க வர்றேன்!...வந்து அவங்க எல்லோர் காதிலேயும் படற மாதிரி நாத்திக வசனம் பேசறேன்!...உங்க கோயிலையும் கொஞ்சம் கிண்டல் பண்றேன்!...நீ என்னைத் திட்டு...நான் கோவிச்சிட்டு வெளிய போயிடறேன்”

“அப்புறம்?” சுதாகர்ஜி கேட்டார்.

“அப்புறம் நடக்கப் போறது என்னோட ஆக்‌ஷன் சீக்வென்ஸ்!...எப்படிப் பண்றேன் பாருங்க ஜீ” என்றான் ரவீந்தர்.

“ம்ம்ம்..ஒரு கோவில் குருக்களா இருந்துக்கிட்டு நானே இந்த வேலை செய்யறது...எனக்கு மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்குப்பா”  வருத்தமாய்ச் சொன்னார் சுதாகர்ஜி.

“அடப் போங்க ஜி!...அவனவன் ஒணுக்கும் ஆகாத பொருளையெல்லாம் “ஆஹா...ஓஹோ”ன்னு பில்ட்அப் பண்ணி வியாபாரம் பண்ணி...கோடி கோடியாக் குவிக்கறானுக!...நாம என்ன அப்படியா செய்யறோம்!...கோவில் வருமானத்துக்கும் ...கோவில் கட்டிடத்தைப் புதுப்பிக்கறதுக்கும் ஒரு சின்ன யுத்தியைக் கடைப்பிடிக்கறோம்!...அவ்வளவுதான்” தன் செயலை நியாயப்படுத்தினான் ரவீந்தர்.

ஒரு நெடிய தயக்கத்திற்குப் பின், “சரிப்பா...ஏதோ செய்யி!...ஆனா...கவனமா செய்யி!...நாம தவறு செய்யறோம்ன்னு வெளிய தெரிஞ்சிடுச்சின்னா...அவ்வளவுதான்!...அப்புறம் என் மேலேயும் இந்தக் கோயில் மேலேயும் ஃப்ராடு முத்திரை குத்திடுவாங்க!...” என்றார் சுதாகர்ஜி.

“நீங்க பயப்படவே வேண்டாம் ஜி!...நான் பார்த்துக்கறேன் எல்லாத்தையும்” ரவீந்தர் சொல்லும் போது வாசலில் குரல் கேட்டது.

“ஸ்வாமிஜி வந்திருக்காரா?” வத்சலாவின் தந்தை கஸ்தூரி அய்யா வெளியிலிருந்தே கேட்க,

“ஆமாங்க அய்யா!” என்றபடியே வாசலுக்கு வந்த ரவீந்தர், “உள்ளார வாங்க அய்யா” என்று அவரை அழைத்தான்.

உள்ளே வந்தவருக்கு ஒரு நாற்காலி எடுத்துப் போட்டான்.

3 comments

  • Nice epi sis👏👏 ravindar ji ku yaar pair aavanga nu theriyalaiye :Q: Eagerly waiting for next epi sis👍
  • Marketing pulli Ravinder thanakk theriyamal thanaye Marketing panuraru :D :grin: pulli yaroda Eli yaga maraporaro :Q: <br />Sundar ji ivalo guilty feelings vendam god oda hidden power pulli market pana poraram :lol: so wait and watch the action on Wednesday ;-) andha poori kondu vandhara illaya :P interesting update sir 👏👏👏👏👏👏<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.