”இல்ல . .” மென்றுமுழிங்கியவன் ”பிருந்தா ஆபீஸ் பக்கமா எனக்கு ஒரு வேலை இருக்கு . . வேல முடிச்சிட்டு அவள மீட் பண்ணப்போறேன்.”
தனுஷ் முடிக்கும்முன் ”அட்ரா அட்ரா அட்ரா . . சைட் அடிக்க போறேனு சொல்லு” சொல்லிய சஞ்சய் பல்லெல்லாம் தெரிய பெரியதாகச் சிரித்தான்.
”இல்லடா ஆபிஷியல் வொர்க் . . அதான்”
”சமாளிபிகேஷன் போதும் நான் நம்பிட்டேன் பிக் ப்ரோ . . ம்ம் நடத்து நடத்து” எனக் கிண்டலடித்த சஞ்சய் கண்ணடிக்க
தனுஷ் முகத்திலும் சந்தோஷ ரேகை பரவியது. ”கல்யாணம்வரை இவனை சமாளிக்கணுமே” என மனதில் நினைத்துக் கொண்டான்.
“அண்ணிய தனியா இப்போதான் மீட் பண்ணப்போற இன்னிக்காவது ஐ லவ் யு சொல்வியா? ரகசியமாய் கேட்டான்.
தனுஷிற்கும் அவளுடன் தனியே பேசி சிரித்து மகிழ ஆசைதான். அதிலும் திருமணத்திற்கு முன் காதலர்களை போல ஐ லவ் யு சொல்ல ஆசை. ஆனால் தாத்தா கொடுக்கும் வேலை முடிக்கவே நேரம் இல்லை என்ன செய்வது? இதில் எங்கே இ லவ் யு சொல்வது என்ற எண்ணவோட்டம் மேலோங்க பெருமூச்செறிந்தான்.
சஞ்சய்க்கு தனுஷின் நிலைமை ஓரளவு தெரியும். தாத்தா மேல் கோபமாக வந்தது. “இந்த தாத்தா ரொம்ப மோசம்” என முணுமுணுத்தான். தனுஷிற்கு தாத்தா மேல் உள்ள பாசம் அவன் அறிவான் ஆதலால் மன ஆதங்கத்தை வெளிக்காட்டவில்லை.
“கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு தடவையாவது அண்ணிகிட்ட ஐ லவ் யு சொல்ல ஆசைல தனுஷ் . . உன்னோட ஆசை இன்னிக்கி நிறைவேற போகுது”
தனுஷ் அழைப்பிதழை செல்போனில் போட்டோ எடுத்து பிருந்தாவிற்கு வாட்சப்பில் அனுப்பினான். இரண்டு கருப்பு கோடுகள் இன்னும் அவள் செய்தியை காணவில்லை என்பதாய் அதில் காட்டியது.
பின்பு இருவரும் சிரித்துப் பேசியபடி வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். ”நான் பார்க் பண்ணிட்டு வரேன் . . நீ இன்விடேஷனை எடுத்திட்டு போய் தாத்தாகிட்ட குடு” தனுஷ் இன்விடேஷனை நீட்ட
”நான் பார்க் பண்றேன் . .நீ” எனத் தொடங்கிய சஞ்சையை ”டேய் சொன்னத செய்டா” என அடக்கினான் தனுஷ். அதற்குள் டிரைவர் அவர்களை நோக்கி ஓடிவர ”தம்பி நான் பார்க் பண்றேன் . . நான் வர்றதுக்குள்ள நீங்க கிளம்பிட்டிங்களே” என்றார் ஆற்றாமையுடன்.
”பரவால்ல அண்ணே . . இங்க பக்கமாதான் போனோம். உங்க மகன் உடம்பு பரவாயில்லயா?