கட்டளையிட்டது. மனமோ கட்டளை ஏற்க இயலாமல் தவித்தது.
அழைப்பிதழ்களை வாயிலில் வைத்தான். ஒருமுறை வீட்டை பார்த்தவன். தான் வளர்ந்த வீடு இனி தனதில்லை. இனி தனக்கும் அவர்களுக்கும் எந்த பந்தமும் இல்லை. அம்மாவை நினைக்கதான் பாவமாக இருந்தது. தன் மேல் உயிரையே வைத்திருப்பவர். அப்பா மற்றும் தனுஷின் பாசம் அலாதி. இனி எதுவும் வேண்டாம் என முடிவெடுத்தான். அழுந்த கண்ணீரை துடைத்தவன் அங்கிருந்து செல்ல திரும்ப . . எதிரே தோய்ந்த முகத்துடன் தனுஷ் நின்றிருந்தான்.
எந்த ரகசியம் சஞ்சைக்குத் தெரியக் கூடாது என ஒவ்வொரு நொடியும் வேண்டினானோ அவை அனைத்தும் இன்று ஆழிப்பேரலையாய் அவர்களைத் தாக்கி முழ்கடித்துவிட்டது. அம்பிலிருந்து விடுபட்ட பாணமாய் சொற்கள் விடுபட்டிருக்க . . இனி எதையும் திரும்ப பெற முடியாது அழிக்கவும் இயலாது.
இருவர் கண்களும் நேருக்கு நேராக சந்தித்தன. சற்று முன்னிருந்த உற்சாகம் காணாமல் போனது. சஞ்சய் ”தேங்க்ஸ் பார் எவரிதிங் ப்ரோ” என கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து நகர முற்பட . .
அவன் எண்ணங்களை துள்ளியமாக உணர்ந்த தனுஷ் ”என்னடா பெரிய இவனு நினைப்பா . . என்னோட வாடா” என உரிமையோடு உள்ளே இழுத்துச் செல்ல முற்பட்டான்.
ஆனால் சஞ்சய் ”வேண்டா வேண்டா ப்ரோ” என்றான். அவன் சக்தி முழுவதும் உறிஞ்சப்பட்டதுப் போல இருந்தது. அவனால் சரியாக பேசக் கூட இயலவில்லை.
இருவரும் உள்ளே செல்ல . . அவர்கள் முகத்தை வைத்தே மற்ற அனைவரும் நிலவரத்தை புரிந்துக் கொண்டனர். ”நீ என் பையன்டா” என அம்மா ஓடிவந்து அவனை கட்டி அணைத்து அழத் தொடங்கினார். சஞ்சயாலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவனும் அன்னையை அணைத்து கதறிவிட்டான்.
அவரை அணைத்தவன் அப்படியே சரிந்து அவரின் பாதங்களைத் தொட்டு ”அம்மா” என்றான். “அம்மா” எனும் வார்த்தையை சொல்ல தனக்கு தகுதி உள்ளதா என மனம் கசந்தது. அந்த ஒரு வார்த்தையை சொல்லி முடிக்கும் முன் அவன் பட்டபாடு அவனே அறிவான். வீடே அமைதியானது.
சஞ்ஜையின் நிலையை காண தனுஷால் முடியவில்லை. அவன் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தான். அவன் தோளில் ஆதரவாய் பிடித்து ”சஞ்ஜய் நீ என் சொந்த தம்பி இல்ல . . இவங்க உன் அம்மா அப்பா இல்லதான். உன் மனநிலை புரியுதுடா . . விடு . . பழசை கிளறவேண்டாம்.”
”இப்ப சொல்றேன் நீ என் தம்பிதான். நீ இந்த வீட்டு வாரிசுதான். இதுல எந்த மாற்றமும்