டாக்டர் என்ன சொன்னார்?” தனுஷ் ஆறுதலாய் கேட்க
ஐம்பத்தைந்து வயதைக் கடந்த டிரைவர் முகம் தனுஷின் கேள்வியால் நிறைவானது. அதுதான் தனுஷ் என்றுமே தான் முதலாளி . . இது என் வேலையாள் என பாகுபாடு பார்க்க மாட்டான்.
”டாக்டர் மாத்திரை குடுத்திருக்காரு தம்பி” என டிரைவர் சொல்லிக் கொண்டிருக்க . . சஞ்சய் விசிலடித்தபடி நடந்துக் கொண்டிருந்தான். மனம் மகிழ்ச்சியில் அலைமோதியது. தனுஷ் என்றுமே எதையும் கேட்க மாட்டான். தனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பான். அப்படி உன்னதமான குணம்க் கொண்டவன்.
அவன் வாழ்க்கையில் திருமணம். அவனும் பிருந்தா அண்ணியும் எல்லா சுகங்களையும் பெற வேண்டும் என மனதார இறைவனை வேண்டினான். கார்டனை கடந்து உள்ளே செல்ல எத்தனிக்கையில் ”பாருங்க நான் சம்பாதிச்ச எல்லா சொத்தும் என்னோட சொந்த பேரன் தனுஷ்க்கு மட்டும்தான். எங்க இருந்தோ தூக்கிட்டு வந்த அனாதை சஞ்சய்க்கு இல்லை ” என்ற குருராகவன் தாத்தா சொற்கள் சஞ்சய் காதில் விழுந்தது.
அவன் கேட்ட விஷயத்தின் உட்பொருள் விளங்காதவனாய் உள்ளே செல்ல எத்தனித்தன். இன்னும் அவனால் தான் கேட்டது உண்மையா? தாத்தா விளையாட்டாக கூறுகிறாரா? என இனங்கான இயலவில்லை. ஏதோ ஒன்று நெஞ்சை அழுத்தியது. தன்னைச் சுற்றி காரிருள் சூழ்வதைப் போல ஓர் உணர்வு.
”மாமா சஞ்சையும் என் பிள்ளைதான். என்னிக்கு அவனை என் கையால தூக்கினேனோ அந்த நொடியே அவன் என் பிள்ளை ஆகிட்டான்” என தனுஷின் தாய் சாந்தி சொல்ல . . அவரின் கரகரத்த குரலே அவர் வெகுநேரமாக அழுதுக் கொண்டிருக்கிறார் என சஞ்சய்க்கு புரிந்தது. சஞ்சய் மனம் சுக்கு நூறாய் உடைந்தது.
அந்த பங்களாவின் பெரிய வாயில் கதவின் ஓரத்தில் சஞ்சய் நிற்பதை யாரும் கவனிக்கவில்லை. ”அப்பா நீங்க பேசறது கொஞ்சமும் சரியில்ல . . சஞ்சையும் நம்ம வீட்டு பிள்ளைதானேப்பா” தனுஷ் தந்தை ராமகிருஷ்ணன் தன் அப்பாவை கடிந்துக் கொண்டார்.
”பாருப்பா நான் சஞ்சைக்கு எதுவுமே செய்ய வேண்டாம்னு சொல்லல . . காலங்காலமா வர்ற நம்ம பரம்பரை சொத்து நம்ம சொந்த ரத்ததுக்குதான் போகணும் நினைக்கிறேன். இதுல என்ன தப்பு இருக்கு சொல்லு? சஞ்சய்க்கு அதுல உரிமை இல்ல . . அவனுக்கு வேற எதாவது தரலாம். நான் தடுக்கலை”
”ஆமாண்டா அப்பா சொல்றதுல எந்த தப்பும் இல்ல” என பாட்டி காவேரியும் அவர் பக்கம் பேசினார்.
இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சஞ்சய் சிலையாகிப் போனான். கால்கள் உள்ளே செல்ல மறுத்தன. இனி தனக்கும் இந்த வீட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மூளை