(Reading time: 8 - 15 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

குடுத்திட்டா” என்றான்.

முந்தின தினம் ரவீந்தரோட கோவிலில் மோதிய அந்த நபர் கூட்டத்திற்குப் பின்புறமிருந்து முன்னால் வந்தார்.  “என்னப்பா சொல்றே?”

“நேத்திக்கு ராத்திரி பனிரெண்டு மணி வரைக்கும் புத்தகம் படிச்சிட்டு...அதுக்கப்புறம்தான் தூங்கினேன்!...கனவுல...அம்மன் விஸ்வரூபம் எடுத்து என் எதிரில் வந்து நின்னு “அற்பப் பதரே!...என் சன்னிதானத்துக்கே வந்து..என்னையும்...என் குல மக்களையும் கேவலமாய்ப் பேசிய உனக்கு இப்ப புகட்டறேன் சரியான பாடம்”ன்னு சொல்லி என்னை அப்படியே ஒரு கோழிக் குஞ்சைத் தூக்கற மாதிரி தூக்கிட்டுப் போய் ஒரு முட் புதருக்குள் வீசினாள்!...அவ்வளவுதான் எனக்குத் தெரியும்!...ஆனா....இப்பக் கண் விழிச்சுப் பார்த்த பிறகுதான் புரியுது...நான் கண்டது கனவல்ல...நிஜம்!ன்னு” என்றான் ரவீந்தர் மிரண்ட குரலில்.

அதைக் கேட்டு, “ஹா....ஹா....ஹ...”வென்று சிரித்தான் கூட்ட்த்தில் நின்றிருந்த சுதாகர்ஜியின் குலத்துக்காரனான அந்த பால்ராஜ், “இப்ப புரிஞ்சுக்கிட்டியா..எங்க உப்பாயம்மனோட மகிமையை!.. நேத்திக்கு நீ பேசும் போதே நினைச்சேன் “ஆத்தா நிச்சயம் உனக்கு ஒரு ஆப்பு வெப்பா!”ன்னு அதே மாதிரி வெச்சிட்டா!...இனிமேல் அந்தக் கோயில் பக்கமே வந்துடாதே...வந்தே?...இந்த தடவை அம்மன் உன்னை சுடுகாட்டுக்கு வெளிய போட்டிருக்கா...அடுத்த தடவை உன்னை சுடுகாட்டுக்குள்ளார போட்டுப் புதைச்சிடுவா...ஜாக்கிரதை” என்றான்.

அவனைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான் ரவீந்தர்.

அதைத் தனக்குக் கிடைத்த பெருமையாய் நினைத்துக் கொண்டு எல்லோரையும் பார்த்து எலி வால் மீசையை முறுக்கினான் அந்த பால்ராஜ்.

“சரி..இவரை...இப்படியே வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவோம்!...மீதியை அங்க வெச்சுப் பேசிக்குவோம்” என்று கஸ்தூரி அய்யா சொல்ல,

“இல்லைங்க...எனக்கு ஒரு டாக்ஸி மட்டும் ஏற்பாடு பண்ணிக் குடுங்க...நான் இப்படியே கோயமுத்தூர் போயி இந்தக் காயங்களுக்கு டிரீட்மெண்ட் எடுத்திட்டு வர்றேன்” என்றான் ரவீந்தர்.

“அதுக்கு எதுக்குப்பா கோயமுத்தூர் போகணும்?...இங்கியே நிறைய டாக்டர்க இருக்காங்களே?” என்றார் கஸ்தூரி அய்யா.

“அது...வந்து...கோயமுத்தூர்ல டாக்டர் பரமசிவம்ன்னு ஒருத்தர் இருக்கார் அவர் கிட்டேதான் நான் எப்பவும் பார்ப்பேன்...அதனால அங்கியே போறேன்”

“அப்ப...நானும் உன் கூட வ்ர்றேன் ரவீந்தர்” என்றார் சுதாகர்ஜி.

“வேண்டியதில்லை ஜி...நீங்க இங்க கோவிலைப் பாருங்க...நான் மட்டும் போயிட்டு

3 comments

  • Nejamave adi padavachikitara 😱😁 Marketing pulli temple-i nalla market panitaru... :D ini mr Ji kk nalla varumanam varumo??? Interesting update sir 👏👏👏👏👏 <br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.