(Reading time: 7 - 13 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 13 - தனுசஜ்ஜீ

வ்வொருவர் மனதிலும் வேறு வேறு விதமான யோசனைகள் ஓடிக்கொண்டிருந்தன. அந்த வாரம் அப்படியே சென்றது.

      அனிதாவும் ஓரளவு குணம் பெற, அடுத்த நாளே டாக்டர் டிஸ்சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார். கதிர் அவளை அன்று பார்த்ததோடு சரி. அதன் பிறகு மருத்துவமனை பக்கமே வரவில்லை. ஆனால் கார்த்திக்கிடம் அவளது உடல்நிலை பற்றி மட்டும் தெரிந்து கொண்டான்.

     அனிதா கதிரை பிடிக்கவில்லை என்று கூறிய அடுத்த நாளே அபிராமியை கூப்பிட்டு விஷயத்தை சொல்லிவிட்டனர் அனிதாவின் பெற்றோர்கள். அபிராமிக்கு தான் மிகவும் ஏமாற்றமாக போய்விட்டது. மனசே இல்லாமல் சரி என்று கூறியவர். உடனே கதிரிடம் விஷயத்தை கூற அவன் எதுவும் நடவாதது போல நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் மாம் அப்புறம் பேசுறேன் என்று போனை வைத்து விட்டான்.

     கார்த்திக்கும், அசோக்கும் விஷயத்தை கேட்டு தாம்தூம் என்று குதித்தனர். இத்தனைக்கும் அனிதா கதிரை  பிடிக்கவில்லை என்ற விஷயத்தை மட்டுமே கேட்டு, அவர்கள் தங்களுக்குள்ளே நொந்து விட்டனர். அனிதாவிடம் அசோக் தனியாக பேசவேண்டும் என்று கூறி, என்ன காரியம் பண்ணி வச்சிருக்கா அனிதா.  இதுதான் உன் லவ் வா. அன்னைக்கு என்னமோ அவ்ளோ டயலாக் விட்ட கதிர நான் தான் பத்திரமா பாத்துக்க முடியும் அப்படி இப்படின்னு. இந்த சின்ன விஷயத்துக்கே அவனை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா...

( அசோக் தம்பி கதிர வேணாம்னு சொன்னதுக்கே  இவ்ளோ குதிக்கிறியே.... அவ உன்ன தான் மேரேஜ் பண்ண போறேன்னு சொன்னானு தெரிஞ்சா  என்ன ஆவியோ அய்யோ பாவம்)

  நல்லவேளை கதிர் உன்ன லவ் பண்ணல.  உன்ன நம்புனா இப்படிதா பாதில  ஓடிப் போய்டுவியோ என்று அவன் ஆவேசமாக கத்த.....

      போதும் நிறுத்து அசோக் இது என்னோட லைஃப்.எனக்கு யார் வேணும்னு நான் தான் முடிவு பண்ணனும் நீ இல்ல ஓகே.

அவளைத் தீ பார்வை பார்த்து கொண்டே விருட்டென்ற நடையுடன் வெளியேறிவிட்டான்.

      மொழிக்கு தன்னை சுற்றி நடப்பது நல்லதா??? கெட்டதா???? என்று அறிய கூட முடியவில்லை. கதிர் மேலும் அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை வரவில்லை. தன்னுடைய தோழியின் இந்த  நிலைக்கு கதிர் தான் காரணம் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது. ஆனால் உயிருக்குயிராக நேசித்த அனிதா ஏன் இந்த முடிவு எடுத்தாள் என்பது மட்டும் மொழிக்கு குழப்பத்தை உண்டாக்கியது. இப்போதைக்கு அனிதாவிற்கு துணையாக மட்டும் இருந்தாள். அவளுடைய பெற்றோருக்கு உதவியாக மருத்துவமனையில் பகல் முழுவதும் இருந்துவிட்டு

20 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.