தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 18 - முகில் தினகரன்
சாவுக்கு வந்திருந்த உறவினர்களெல்லாம் ஒவ்வொருவராகச் சென்று விட்ட பின் சம்பூர்ணத்தின் வீடே வெறிச்சோடிப் போனது. மனம் மற்றும் உடல் பலவீனம் காரணமாக சம்பூர்ணத்தால் சமையல் வேலைகளில் ஈடுபட முடியாது போக, அடுத்து வந்த மூன்று நாட்களுக்கு அவளுக்கும், அவள் மகன் சுரேஷிற்கும் தேவநாதன் வீட்டிலிருந்தே சாப்பாடு வந்து போனது.
“ப்ச்...உங்களுக்கு வீண் சிரமம்!” சம்பூர்ணம் தயங்க,
“சேச்சே!...இதிலென்ன சிரமம்?...” என்றபடியே தான் கொண்டு வந்திருந்த உணவுப் பதார்த்தங்களை சம்பூர்ணத்திற்கும் அவள் மகன் சுரேஷிற்கும் பரிமாறினாள் பார்வதி.
அந்த விநாடியில் சம்பூர்ணத்தின் மனம், “ஹூம்...இதே பார்வதியை நான் எத்தனை முறை...எவ்வளவு மோசமாய்த் திட்டியிருக்கேன்!...சண்டை கூடப் போட்டிருக்கேன்!...ஆனா அதையெல்லாம் கொஞ்சம் கூட மனசுல வெச்சுக்காம..எனக்கு அவள் உதவி செய்யறாளே!...இவ்வளவு நல்லவளையா நான் நோகடிச்சிருக்கேன்!” எண்ணி எண்ணி வேதனித்தது.
பரிமாறி முடித்த பின், “அவசரம் எதுவுமில்லை...நீங்க ரெண்டு பேரும் நிதானமா சாப்பிடுங்க!...நான் அப்புறமா வந்து பாத்திரங்களை எடுத்துக்கறேன்!” சொல்லி விட்டு வாசல் தாண்டி வெளியேறினாள் பார்வதி.
அவள் சென்ற பின் சுரேஷ் கேட்டான், “அம்மா...இவங்க நமக்கு உறவா?”
“ம்ஹும்!...நம்ம வீட்டுல வாடகைக்கு குடியிருக்காங்க!...அவ்வளவுதான்!”
“உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கும்மா!...வாடகைக்குக் குடியிருக்கறவங்க கூட இந்த அளவுக்கு ஹெல்ப் பண்றாங்களா?”
“ஆமாம்டா!...இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கே ரொம்பக் குற்ற உணர்வா இருக்குடா!” சம்பூர்ணம் நெகிழ்வுடன் சொன்னாள்.
“ஏன்?...இதுல உனக்கெதுக்கு குற்ற உணர்வு?”
“உனக்குத் தெரியாதுடா!..ஹவுஸ் ஓனர்ங்கற திமிர்ல இவங்களையெல்லாம் நான் எத்தனை கேவலமா நடத்தியிருக்கேன் தெரியுமா?...தொட்டதுக்கெல்லாம் சண்டை போட்டு...கண்டபடி திட்டுவேன்!...அவங்க நிம்மதியாவே இருக்க முடியாதபடிக்கு டார்ச்சர் பன்ணிட்டே இருப்பேன்!”...ஆனா இவங்க?...ச்சே...த்ப்புப் பண்ணிடேண்டா!”
“இட்ஸ் ஓ.கே!ம்மா...இப்ப புரிஞ்சுக்கிட்டியல்ல?...அது போதும்!”
அரை மணி நேரத்திற்குப் பிறகு,
நிதானமாய் சம்பூர்ணத்தின் வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா, “அம்மா...பாத்திரங்களை எடுத்திட்டு