இஷ்டபட்டாலும் சரி. கஷ்டபட்டாலும் சரி. என்ன மீறி எவன் உன் கழுத்துல தாலி கட்டுறானு பார்க்குறேன் என்று அவன் ஒரு கையால் அவள் இரு கன்னத்தை நசுக்கிய படியே கூறினான்.
அவள் வலி தாங்க முடியாமல் முகத்தை சுருக்க..... கையை எடுத்தவன். பொறுக்கினு சொன்னல அந்த பொறுக்கி என்ன வேலை பண்ணுவானு உனக்கு காட்டுறேன்டி. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இனி நீ சுடிதார் போடாத...... என்னோட ஃபேவரட் பிளேஸ் - அ அது மறைச்சிருது எனக்கு பிடிக்கல என்று அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன் ஏதேச்சையாக ஜன்னல் பக்கம் திரும்ப அங்கு அவளுடைய அப்பாவை கண்டு விட்டான். உடனே அவளிடம், உடம்ப பார்த்துக்கோங்க அனிதா..... இனிமே இப்புடி அசால்ட்டா இருக்காதிங்க. அங்கிள் ஆண்டி எவ்ளோ பயந்துட்டாங்க தெரியுமா என்று அவன் அழகாக மேனேஜ் பண்ண...
அனிதாவிற்குத்தான் குழப்பமாக இருந்தது என்ன இவன் லூசு மாறி ஒழறான்.
அந்த நேரம் சரியாக அவள் அப்பா அம்மா மற்றும் அபிராமி உள்நுழைத்தனர். இவனின் பேச்சை கேட்டபடியே அவர்கள் சிரித்த முகமாக உள் நுழைந்தனர்.
இப்பொழுது அனிதாவிற்கு அனைத்தும் விளங்க ..... அவனை முறைத்தவள். வெங்கடாசலமிடம் திரும்பி அப்பா இவரு ..... என்று ஆரம்பிக்க..... அந்த நேரம் பார்த்து அசோக் உள்நுழைந்தான்.
அவனை கண்டதும் கதிர், மாப்புள வந்துட்டிங்களா என்று ஓடிச்சென்று கட்டியணைக்க.......
என்னது மாப்புள்ளயா😲😲😲 (அசோக்)
Next episode will be published on 12th Mar. This series is updated weekly on Friday evenings.
தொடரும்