தொடர்கதை - காதலடி நீயெனக்கு!! – 05 - பத்மினி செல்வராஜ்
தன் கையை மடித்து தலைக்கு அடியில் வைத்து கொண்டு விட்டத்தை பார்த்தவாறு படுத்திருந்த விஷ்வா விற்கு அடுத்து என்ன செய்ய என பல யோசனைகள் குழப்பி அடித்தன.
அவனுடைய மனதில் மண்டி இருந்த குழப்பத்தால் உறக்கம் வராமல் விழித்து கொண்டிருந்தான்.
அதே நேரம் அவன் அருகில் படுத்திருந்தவளோ நன்றாக குறட்டை விட்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள். அவள் புறமாய் திரும்பி பார்த்தவன் அவளின் நிம்மதியான உறக்கத்தை கண்டு கடுப்பானவன்
“பிசாசு...எப்படி தூங்கறா பார்... ஒரு வயசு பையன் கூட தனியா இருக்கோம்னு பயம் கொஞ்சம் கூட இல்லாமல், என்னவோ சொந்த வீட்டில் அவ பெட்ல தூங்கற மாதிரி இப்படி நிம்மதியா தூ ... ூக்கி எறிந்தான்.
பின் படுக்கையில் இருந்து எழுந்தவன், கதவைத் திறந்து கொண்டு வெளியே செல்லலாம் என்று கதவை திறக்க முயல, அதுவோ வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...