தொடர்கதை - கண்ணின் மணி - 24 - ஸ்ரீலேகா D
பூர்வியின் உடல் சில்லிட்டுப் போனது. ஒரு மாதமாக பல ரகமான குறுக்கு வழி காரியங்களில் ஈடுப் பட்டிருந்தாள். இருந்தப் போதும் இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொள்ளவில்லை. திவேஷ் என்ன செய்வானோ என்ற எண்ணத்தில் அவளுக்கு நா வறண்டுப் போனது. அவனை பார்க்கவே பயமாக இருந்தது.
“பூ? என்னைப் பார்க்க வந்தியா?” திவேஷ் காதல் ரசம் கொட்ட கேட்டப் போது பூர்வியால் நம்பக் கூட முடியவில்லை.
ஏமாற்ற பார்க்கிறானா? சந்தேகத்துடன் தான் திவேஷைப் பார்த்தாள். திவேஷ் சிரித்துக் கொண்டிருந்தான்.
அவளுடைய மனம் கவர்ந்த சிரிப்பு! ஒரு வினாடி பூர்வியின் இதயத்தில் ரத்தம் கசிந்தது. இவன் ஏன் நல்லவனாகவே இருந்து தொலைத்திருக்க கூடாது?
...
This story is now available on Chillzee KiMo.
...
அதுவும் நல்லதிற்கு தான். பூர்வியை முட்டாளாக அவன் நினைத்துக் கொண்டிருக்கும் வரைக்கும் அவளுக்கு ஆபத்து கிடையாது. இந்த முட்டாளிடம் ஏமாற போகும் முட்டாள் நீ தான்! திவேஷை தடுக்காமல் அனுமதித்தாள்.