அர்ச்சனா!...ஆனா என்னை விட குறைந்த அளவே வருமானம் எடுத்துக்கறா!...நான் ஏதோ தப்பு செய்யற மாதிரி எனக்கு தோணுதும்மா!” புலம்பித் தள்ளினான்.
அவனது புலம்பலைப் பார்த்துப் புன்னகைத்த சம்பூர்ணம், “அப்ப...அவளையே நிறுவனத்துக்கு முதலாளியம்மா ஆக்கிடு...எல்லா பிரச்சினையும் சரியாயிடும்!” என்று சொல்ல,
“எப்படிம்மா?” என்று அப்பாவியாய்த் திருப்பிக் கேட்ட மகனின் பின் தலையில் செல்லமாய்த் தட்டி விட்டு,
“ம்..இப்ப வெறும் வொர்க்கிங் பார்ட்னரா இருக்கறவளை...லைஃப் பார்ட்னரா மாத்திடு...உறுத்தல் சரியாயிடும்!” என்றாள்.
அதைக் கேட்டதும், “அ...ம்...மா!” என்று விழிகளை விரித்துக் கொண்டு சுரேஷ் கூவினான்.
“ஏண்டா?...அவ மறுத்திடுவா!ன்னு பயப்படறியா?...எனக்கு நம்பிக்கை இருக்குடா!...நிச்சயம் அந்தப் பொண்ணும் சரி...அவளைப் பெத்தவங்களும் சரி...என்னோட இந்தக் கோரிக்கையை நிச்சயம் ஏத்துக்குவாங்க!...ஏன்னா?...அவங்கெல்லாம் “அன்பில் உள்ளது வாழ்க்கை!”ன்னு நம்பறவங்க!...காசு பணத்தையோ...உடல் அழகையோ பெரிசா நினைக்கறவங்க இல்லை!” நம்பிக்கையோடு சொன்னாள் சம்பூர்ணம்.
தாய் சொல்வது ஒருவிதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமாயிருந்தாலும், நடைமுறையில் அதை சாத்தியப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை யோசித்துப் பார்த்த சுரேஷ், தாயின் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு அங்கிருந்து அமைதியாய் நகர்ந்தான்.
“தன் மகனுக்கு ஒரு நல்ல மனையாள் அமையணும்னு எல்லாத் தாய்மார்களும் ஆசைப் படுவதைப் போல்தான் என் தாயும் ஆசைப் படுகிறாள்!...ஆனால், எல்லா மகன்களும் என்னைப் போல் ஒற்றைக்கால் மகன்களா என்ன?” அவன் மனம் சன்னக் குரலில் சொல்லி விட்டு அடங்கியது.
தொடரும்...
Next episode will be published on 27th Mar. This series is updated weekly on Saturdays.