விழிகளை உருட்டிக் கொண்டே தன்னுடைய அம்மாவை நோக்கி வந்தது.
கவிதா தன் குழந்தையை தூக்கி தர்ஷினியிடம் காட்ட.....
ஹாய் லட்டு குட்டி நான் தான் உன்னோட புது அத்தை. அத்தைக் கிட்ட வாங்க என்று கையை நீட்ட,
அந்த குட்டி வாண்டு அவள் அம்மாவை கட்டிக் கொண்டது.
அந்த குட்டியின் செய்கை கண்டு தர்ஷினி கன்னத்தில் குழி விழ சிரித்தாள். சரியாக அதே நேரத்தில் கதிரும் கொள்ளை புறம் வர அவளது கன்னக்குழி சிரிப்பை பார்த்துக் கொண்டே..... அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
இங்கே என்ன நடக்குது.....என்று அந்த குட்டி வானரப்படையிடம் கேட்க அவர்கள் அனைவரும் கப்சிப்பென்று இருந்தனர்.
என்னடா இவ்வளவு சைலன்டா இருக்கீங்க. இவங்க தான் உங்க புது ஃபிரண்ட் என்று தன் மனைவியை அவன் அறிமுகப்படுத்தினான்.
அப்பொழுதும் அவர்கள் அமைதியாக நிற்பதை கண்டவன் இது சரிவராது என்று,
பாவாடை சட்டையுடன் மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்தது அவர்களை அருகில் அழைத்தவன்.
குட்டி பையனை இடுப்பில் தூக்கி வைத்த இந்த மூன்று பெண் குழந்தைகளையும் அறிமுகம் செய்து வைத்தான். இந்த இரண்டு பேரும் திவ்யா, ரம்யா பெரிய அண்ணா பிள்ளைங்க..... இந்த சின்ன மேடம் பேரு ரஞ்சினி. அக்காவோட மூத்த பொண்ணு. இவன்தான் அக்காவோட பையன் வெற்றி என்று தன் கையில் இருந்த குழந்தையை அவன் அறிமுகம் செய்து வைத்தான்.
சூப்பர் கதிர் எல்லாரோட பேரும் சூப்பரா இருக்கு. என்னோட பேர் எப்படி இருக்கு. எனக்கு எல்லாமே விளையாடத் தெரியும் கண்ணாமூச்சி, ஓடிப் பிடிச்சு, டிக் டிக் என்று அவள் விளையாட்டின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போக குழந்தைகள் அனைத்தும் ஆர்வமாகி விட்டன.
கதிரின் கையில் இருந்த குழந்தை அப்டியா ஒனக்கு கபுடி விலாட தெரிமா..... என்று தன் மழலை மொழியில் அவளிடம் கேட்க.....
ஓ.... சூப்பரா தெரியுமே. ஆனா நீ என்கிட்ட வந்தா தான் விளையாடுவேன் என்று அவள் கூற....
உடனே அந்த குழந்தை குஷியாகி கதிரிடமிருந்து தர்ஷினியிடம் தாவ இதனை எதிர்பார்க்காத கதிர் நிலைதடுமாறி அவள் மீது விழப்போக தர்ஷினி அவனை பிடித்துக்