தொடர்கதை - கனவே கலையாதே.... - 11 - தனுசஜ்ஜீ
தங்கையின் கணவனை கதிர் அறிமுகம் செய்ய ஷாக் அடித்ததுபோல் அவள் அப்படியே நின்றாள். அவளை அப்படி நிற்பதை பார்த்து கதிர் அவளை யாருக்கும் தெரியாமல் உளுக்க...நினைவுலகத்துக்கு வந்தவள். அவனை கண்டவளின் சிந்தனை அவன் தான் இவனா என்ற சந்தேகம் வேறு அவளுக்கு இப்பொழுது எழுந்தது. அதனை தீர்த்துக் கொள்வதற்காக தங்கையின் புறம் திரும்பியவள்.
நீங்க ரெண்டு பேரும் வெளிய எங்கேயாவது போயிருந்தீங்களா என்று கேட்ட....
கதிரின் தங்கை வெகுளியாக,
இல்ல அண்ணி. இவர்தான் 10 நிமிஷத்துக்கு முன்னாடி வந்தாரு.
ஓ அப்படியா என்று கேட்டுக்கொண்டவள். இவன் தான் என்பதை உறுதி செய்து கொண்டாள்.அவனை அறிமுகப்படுத்தியதற்காக வேண்டாவெறுப்பாக ஒரு புன்னகையை சிந்தியவள். கதிரிடம் ரூமிற்கு செல்வதாக கூறி உள்ளே சென்றாள்.
அவள் பின்னே அவனும் உள்ளே வந்து விட்டான்.
தர்ஷீ ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க திடீர்னு என்ன ஆச்சு.
கதிர் புறம் திரும்பி லேசாக சிரித்தவள். ஒன்னும் இல்ல கதிர் டயர்டா இருக்கு என்று சொல்லிவிட்டு கட்டிலில் அப்படியே சாய்ந்தவாறு அமர்ந்து விட்டாள்.
சரிங்க தர்ஷீ நீங்க ரெஸ்ட் எடுங்க அத்தை எல்லாம் இப்ப கிளம்பிடுவாங்க நான் அவங்களை வழி அனுப்பி வச்சிடுறேன்.
அப்படியா சரி இருங்க கதிர் நானும் வரேன்.
அச்சோ தர்ஷீ. அவுங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நான் பார்த்துக்கிறேன்.
வேறொரு நேரமாக இருந்திருந்தால் கண்டிப்பாக அவனுடன் சென்றிருப்பாள். ஆனால் அவளுக்கு இப்பொழுது தலைவலி மண்டையைப் பிளந்தது. இந்த குடும்பத்தில் தான் வந்து ஒரு வாரம் கூட முழுமையாக முடியவில்லை. அதற்குள் தனக்கு ஒரு சிக்கலான ஒரு விஷயம் தெரிந்திருக்கிறது. இதை எப்படி யாரிடம் சொல்வது. நான் கூறினால் நம்புவார்களா!!!!முதலில் கதிர் நம்புவாரா???என்று யோசனையில் இருந்தவள். அவனிடம் சரி என்று கூறி அவனை அனுப்பிவிட்டாள்.
இதுபோன்ற கூட்டு குடும்பத்தில் இருப்பது அவளுக்கு புதிது. இதில் இப்படி ஒரு விஷயம் தனக்கு தெரிந்திருக்கிறது. கதிர் வேறு எனக்கு இன்னொரு சவாலான டாஸ்கை கொடுத்திருக்கிறார். இப்பொழுது நான் என்ன செய்வது என்று மிகவும் ஆழ்ந்த சிந்தனையில் தர்ஷினி இருந்தாள். சிந்தனையில் இருந்தவள் அப்படியே உறங்கியும் விட்டாள்.
அவள் கண்விழித்து பார்க்கும் பொழுது அவளது தலையை கதிர் தன் மடியில் வைத்து