தைலத்தை எடுத்து போட்டுக் கொண்டிருந்தான்.
கண் விழித்தவள் கதிர் அருகில் இருக்கவும். அனைத்து பிரச்சினைகளும் அவள் நினைவில் இருந்த மறைய அவனது வயிற்றோடு கட்டிக்கொண்டாள்.
என்னாச்சும்மா ரொம்ப வலிக்குதா....
இல்லை என்பது போல் தலையசைத்தவள். கதிர் நான் உங்ககிட்ட தலை வலிக்குதுனு சொல்லவே இல்லயே அப்புறம் எப்படி நீங்க கரெக்டா தைலம் போடுறிங்க என்று கேட்க.....
உங்க தலையை கொஞ்சம் தொட்டுப் பாருங்க. எப்புடி கொதிக்குதுனு. ஏதோ ரொம்ப யோசனையாக இருக்கீங்கனு மட்டும் தெரியுது தர்ஷீ. ஆனா நம்மலால முடியாதது எதுவுமே இல்லையே. எல்லா பிரச்சினையும் சீக்கிரம் சரியா போயிடும்னு நம்புங்க என்று அவள் தலையை நீவி விட்டபடியே கூறினான்.
அவன் கூறியதில் சிறிது மனம் தெளிவு பெற்றவள். அவன் சட்டை காலரை பிடித்து கீழே இழுத்து அவன் நெற்றியில் அழுத்தமாக தன் முத்திரையை பதித்தாள்.
அவளது இச்செய்கை கண்டு முகம் மலர்ந்தவன். பதிலுக்கு அவனும் தன் முத்திரையை பதிக்க அவள் நெற்றியை நெருங்கினான்.
தர்ஷினி அவன் தோளை பிடித்து தடுக்க ......
அவன் ஏன் என்பது போல், அவளிடம் பார்வையாலே கேட்க......
தைலமா இருக்கு... என்று அவனை விழுங்கிய பார்வையில் கூறினாள்.
அதில் அவன் உதடுகள் விரிய பரவால்ல..... என்று கூறி இவனும் அழுத்தமான முத்திரையை அவள் நெற்றியில் பதித்தான்.
அவள் வெட்கப்பட்டுக் கொண்டே அவனை தள்ளி விட,
அவளை ஒரு ரொமாண்டிக் லுக் விட்டவன். திடீரென்று ஆ.....ஆ...ஆ...... என்று கத்த.....
என்னாச்சு கதிர் என்று அவள் அக்கரையாக கேட்க,
எரியுது என்று அவன் பாவமாக உதட்டை காட்டி கூற,
நொடியில் அவன் திட்டத்தை அறிந்தவள். முகம் முழுவதும் வெட்கப் புன்னகை பூக்க...... பாஸ் அந்த சீன்-லா இங்க இல்ல கிளம்புங்க கிளம்புங்க என்று தலையணையை தூக்கி அவன் மேல் எரிந்தவள் வெளியே ஓடிவிட்டாள்.
அவனும் அவளிடம் மாட்டிக் கொண்டதை எண்ணி ஒற்றை கண்ணை சுருக்கி தன் தலையில் தானே தட்டிக்கொண்டான்.
சிரித்துக் கொண்டே வெளியே வந்தவள். அங்கே உள்ளவர்கள் அனைவரும் அவரவர்களுடைய வேலையை செய்து கொண்டிருந்தனர். கமலா அம்மா கிச்சனில் இருக்க லக்ஷ்மி அவருக்கு உதவியாக இருந்தாள். பெரிய மருமகள் குழந்தையை வைத்துக்