கொண்டிருந்தாள். ஆண்கள் அனைவரும் வெளியே திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
கதிரின் தம்பி, தங்கை மற்றும் அந்த வானரப் படைகள் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். தர்ஷினி கொல்லைபுறம் வந்து அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதிரின் தங்கையை கண்டவளின் மனதில் இரக்கம் சுரந்தது. வாசல் பக்கம் எட்டி பார்க்க அவளுடைய கணவன் போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். அவனை ஒரு முறை முறைத்தவள். திரும்பி அவர்கள் விளையாடுவதைப் பார்க்க.....
இவள் நிற்பதைப் பார்த்துவிட்டு அவர்கள் இவளையே அமைதியாக குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து சிரித்தவள் இங்க வாங்க என்பது போல் சைகை செய்தாள்.
அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு அவளை நோக்கி மெதுவாக அடியெடுத்து வைத்தனர்.
அவர்கள் அருகில் வந்ததும் ஹாய் ஐ அம் பிரியதர்ஷினி என்று அவள் கையசைத்து கூற,
தயங்கியபடி அனைவரும் நிற்க.... கதிரின் தம்பி மட்டும் முன் வந்து ஐ அம் தமிழ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். வெரி நைஸ் நேம் தமிழ் ஏன் மத்தவங்களாம் பேச மாட்டிங்களா.....
கதிரின் தங்கை மெதுவாக தயங்கியபடி அவள் புறம் வர அதனை குறுஞ்சிரிப்புடன் பார்த்தவள். எதுக்கு நாத்தனாரே இவ்வளவு தயக்கம் நான் தான் உங்கள பார்த்து பயப்படனும் நீங்க இப்புடி இருக்கீங்க.....
இல்ல பயமா இல்ல அண்ணி. புதுசா வர்றவங்க கிட்ட நான் கொஞ்சம் பழக தயக்கமாக இருக்கும் என்று அவளுடைய மெல்லிய குரலில் கூற,
ம்ம்...... அது சரி. இப்படி இருந்தா உங்கள எல்லாரும் ஏச்சிட்டு போய்டுவாங்க..... என்று தர்ஷினி அவளையும் மீறி அவள் மனவருத்தத்தை கொட்டி விட்டாள். அவளைப் பாவமாக பார்த்தவள். அவளை அருகில் அமரவைத்து அவள் தோளில் கை போட்டுக் கொண்டாள்.
உங்க பேர் சொல்லலையே நாத்தனாரே,
கவிதா......
இவ்வளவு அழகான பேர வச்சுட்டு இப்படி தயங்கினா எப்படிங்க. ஆமா உங்களுக்கு ஒரு பேபி இருக்குள.....
ம்ம்..... ஆமா.... லட்டு இங்க வா....என்று அந்த வானர படையிலிருந்து ஒரு வயதே ஆன குட்டி தேவதையை அவள் அழைக்க..... அது தன்னுடைய அழகான நடையுடன் தன் குட்டி