தொடர்கதை - காளிங்கன் - 05 - சுபஸ்ரீ
கபிலன் தலைமையில் பவித்ரா மற்றும் அவன் குழுவினர் கோவை அருகே உள்ள மலை கிராமத்திற்கு வந்தார்கள். மலை கிராமவாசிகளுக்கு இலவசமாக இரண்டு நாள் மருத்துவ முகாம் நடத்த இருந்தனர்.
காலையில் கிளம்பி மலை கிராமத்தை அடைய மாலை ஆகிவிட்டது. அவர்களுக்காக அரசு பள்ளியின் ஒரு சில அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டது. பவித்ரா மற்றும் கீதா இருவரும் ஒரே அறையில் தங்கினர். அவள் குழுவின் ஷங்கர், ஜஸ்டின், பிரணவ் வேறு அறையில் தங்கவைக்கப்பட்டனர். மற்றொரு அறையில் கபிலன் தனியாக இருந்தான்.
குழுவின் ஐவரையும் அழைத்த கபிலன் “ நாளைக்கு காலையில பத்து மணிக்கு கேம்ப் ஆரம்பிக்கும். ஒன்பது மணிக்கு ஸ்பாட்ல நீங்க எல்லாரும் இருக்கனும்” என்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ிறைவடைந்தது. இரவு ஏழு மணிக்கு தங்கள் அறைக்கு பவியும் கீதாவும் வந்து குளித்து சற்றே இளைப்பாறினார்கள். கீதா செல்போனும் கையுமாக அமர்ந்துவிட்டாள். ஷங்கர், ஜஸ்டின், பிரணவ் வெளியே சென்றுவிட்டனர்.